கோவை: கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தெற்கு தீயணைப்பு துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
கோவை: கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தெற்கு தீயணைப்பு துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கடந்த வாரம் ஏற்கனவே இந்த குப்பைக்கிடங்கில் தீ பிடித்தது. 8 மணி நேரமாக போராடி 30 ஏக்கர் பரப்பில் எரிந்த தீயை அணைத்தனர். மீண்டும் குப்பைக்கிடங்கில் தீ பரவியது. விரைவாக தெரிந்ததால் தீயணைப்பு துறையினர் பல இடங்களில் பரவாமல் அணைத்தனர்.
குப்பை குவியலில் சாம்பல் கழிவுகளில் இருந்த அணையாமல் இருந்த கரித்துண்டு, தூக்கி வீசப்பட்ட தீ பெட்டிகளில் இருந்த தீக்குச்சிகள் மூலமாக தீ பரவியிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தீயை அணைக்க, குப்பை கிடங்கு வளாகத்தில் தீயணைப்பு வாகனங்கள் எப்போதும் நிறுத்தி வைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குப்பைக்கிடங்கு அடிக்கடி தீ பிடிப்பதால் வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்திற்கு அருகேயுள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுவதாக தெரிகிறது. குப்பைகளை தரம் பிரித்து கொட்ட வேண்டும். தீ பிடிக்கும் பொருட்களுடன் குப்பைகளை கிடங்கில் கொட்ட அனுமதிக்கக்கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கடந்த வாரம் ஏற்கனவே இந்த குப்பைக்கிடங்கில் தீ பிடித்தது. 8 மணி நேரமாக போராடி 30 ஏக்கர் பரப்பில் எரிந்த தீயை அணைத்தனர். மீண்டும் குப்பைக்கிடங்கில் தீ பரவியது. விரைவாக தெரிந்ததால் தீயணைப்பு துறையினர் பல இடங்களில் பரவாமல் அணைத்தனர்.
குப்பை குவியலில் சாம்பல் கழிவுகளில் இருந்த அணையாமல் இருந்த கரித்துண்டு, தூக்கி வீசப்பட்ட தீ பெட்டிகளில் இருந்த தீக்குச்சிகள் மூலமாக தீ பரவியிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தீயை அணைக்க, குப்பை கிடங்கு வளாகத்தில் தீயணைப்பு வாகனங்கள் எப்போதும் நிறுத்தி வைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குப்பைக்கிடங்கு அடிக்கடி தீ பிடிப்பதால் வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்திற்கு அருகேயுள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுவதாக தெரிகிறது. குப்பைகளை தரம் பிரித்து கொட்ட வேண்டும். தீ பிடிக்கும் பொருட்களுடன் குப்பைகளை கிடங்கில் கொட்ட அனுமதிக்கக்கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.