கோவை; கோவையில் 9.40 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை; கோவையில் நடைபெற உள்ள முகாம்களில் 9.40 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு தழுவிய குடற்புழு நீக்க முகாம் முதல் கட்டமாக மார்ச் 15 மற்றும் மார்ச் 18 முதல் 20ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக மார்ச் 22 மற்றும் மார்ச் 25 முதல் 27ம் தேதி வரையிலும் நடத்தப்படுகிறது. முகாம் நடைபெறும் நாட்களில் அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், துணை சுகாதார நிலையங்களில் 1 முதல் 19 வயதிற்கு உட்பட்டவர்கள் குடற்புழு நீக்க மாத்திரையை பெற்றுக்கொள்ளலாம்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: “குழந்தைகளுக்கு ஏற்படும் குடற்புழு பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் 6 மாதங்களுக்கு ஒருமுறை நாடு முழுவதும் குடற்புழு நீக்க முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி நடப்பாண்டிற்கான முதல் குடற்புழு நீக்க முகாம் வரும் திங்கள்கிழமை துவங்குகிறது.
கோவையில் 19 வயதிற்கு உட்பட்ட 9 லட்சத்து 40 ஆயிரத்து 258 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன. 1 முதல் 2 வயது வரை உள்ளவர்களுக்கு 200 மில்லி கிராம், 2 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு 400 மில்லி கிராம் அளவு மாத்திரைகள் வழங்கப்படும்.
குடற்புழு நீக்க மாத்திரையை உணவு சாப்பிட்டபின் எடுத்துக்கொள்ள வேண்டும். மாத்திரையை வாயில் போட்டு சப்பி சாப்பிட வேண்டும். இதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு பாதிப்பில் இருந்து மீண்டு குழந்தைகள் ஆரோக்கியத்தை பெறுவர்” இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
நாடு தழுவிய குடற்புழு நீக்க முகாம் முதல் கட்டமாக மார்ச் 15 மற்றும் மார்ச் 18 முதல் 20ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக மார்ச் 22 மற்றும் மார்ச் 25 முதல் 27ம் தேதி வரையிலும் நடத்தப்படுகிறது. முகாம் நடைபெறும் நாட்களில் அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், துணை சுகாதார நிலையங்களில் 1 முதல் 19 வயதிற்கு உட்பட்டவர்கள் குடற்புழு நீக்க மாத்திரையை பெற்றுக்கொள்ளலாம்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: “குழந்தைகளுக்கு ஏற்படும் குடற்புழு பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் 6 மாதங்களுக்கு ஒருமுறை நாடு முழுவதும் குடற்புழு நீக்க முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி நடப்பாண்டிற்கான முதல் குடற்புழு நீக்க முகாம் வரும் திங்கள்கிழமை துவங்குகிறது.
கோவையில் 19 வயதிற்கு உட்பட்ட 9 லட்சத்து 40 ஆயிரத்து 258 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன. 1 முதல் 2 வயது வரை உள்ளவர்களுக்கு 200 மில்லி கிராம், 2 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு 400 மில்லி கிராம் அளவு மாத்திரைகள் வழங்கப்படும்.
குடற்புழு நீக்க மாத்திரையை உணவு சாப்பிட்டபின் எடுத்துக்கொள்ள வேண்டும். மாத்திரையை வாயில் போட்டு சப்பி சாப்பிட வேண்டும். இதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு பாதிப்பில் இருந்து மீண்டு குழந்தைகள் ஆரோக்கியத்தை பெறுவர்” இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.