கோவை: மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் அவரது சொந்தத் தொகுதியான பரமக்குடி தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. கோவை தெற்கு தொகுதி அல்லது சென்னையில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை: மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதி அல்லது சென்னையில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யக் கட்சியின் சார்பில் போட்டியிடும் 70 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை தெற்கு தொகுதி அல்லது சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் அவர் போட்டியிடலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலில் இந்த அறிவிப்பு வெளியாக உள்ளது. கோவை தெற்கு தொகுதியில் 2,56, 389 வாக்காளர்கள் உள்ளனர். இதில் சிறுபான்மையினர் 20 சதவீதம் பேர் உள்ளனர். கோவையின் முக்கிய பகுதியான இந்த தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் பாரதிய ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் தேசிய மகளிர் அணி துணைத் தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கபஉகிறது.
தி.மு.க. கூட்டணியில் கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த பாராளுமன்ற இந்த தொகுதியில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்றிருந்தார். இதனால் தெற்கு தொகுதி கமல்ஹாசன் போட்டியிட்டால் வெற்றி பெற்றுவிடலாம் என மக்கள் நீதி மய்ய கட்சி நிர்வாகிகள் கருதுகிறார்கள். அதனால் கமல்ஹாசனை கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட நிர்வாகிகள் வலியுறுத்தி வருகிறார்கள். கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது.