பெரியநாயக்கன்பாளையத்தில் மின்கம்பத்தில் பழுது நீக்கிய கேங்மேன் மயங்கி விழுந்து சாவு!

கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் கேங்மேன் ஒருவர் மின் கம்பத்தில் பழுது நீக்குவதற்காக ஏறிச்சென்று பணியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் கேங்மேன் ஒருவர் மின் கம்பத்தில் பழுது நீக்குவதற்காக ஏறிச்சென்று பணியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சக்தி நகரில் மின் கம்பம் பழுதானது. இதையடுத்து இன்று மாலை 4 மணி அளவில் மின் கம்பத்தில் ஏறி பழுது பார்ப்பதற்காக கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பாம்பே நகர் பகுதியில் வசிக்கும் கேங்மேன் சாய் சந்துரு (வயது 22) என்பவர் வந்தார். அவர் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தபடி மின் கம்பத்தின் மீது ஏறி இடுப்பில் கயிறு கட்டிக்கொண்டு பணி செய்து கொண்டிருந்தார்.



திடீரென அவர் மின்கம்பத்தின் மீது மயங்கி சாய்ந்தார்.

இதைப்பார்த்து அவருடன் பணியாற்றிக் கொண்டிருந்த நண்பர்கள் கணேசன், அச்சர், பத்மநாபன் ஆகியோர் உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் தீயணைப்புத் துறையினருடன் வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாகக் கூறினர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.போலீசார் வழக்கு பதிவு செய்து சாய் சந்துரு மயங்கி விழுந்து இறந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...