உடுமலை திருமூர்த்திமலையில் மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி திருச்சப்பரத்திற்கு சிறப்பு பூஜை!

கோவை: உடுமலையில் மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு திருமூர்த்திமலையில் பாரம்பரிய முறைப்படி திருச்சப்பரத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது.



கோவை: உடுமலையில் மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு திருமூர்த்திமலையில் பாரம்பரிய முறைப்படி திருச்சப்பரத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை அமைந்துள்ளது. இங்கு சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மகாசிவராத்திரி விழா நடந்து வருகிறது.



இந்த நிலையில், இந்தாண்டு மாசி மகா சிவராத்திரி விழாவிற்கு பாரம்பரிய முறைப்படி திருச்சப்பரம் தயார் செய்யப்பட்டு பூலாங்கிணறு, ராகல்பாவி, வாளவாடி, தளி வழியாக கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.

கிராம மக்கள் வேளாண் வளம் செழிக்க, தானியங்கள், உப்பு, பழவகைகளை வீசி ஊர்வலமாக எடுத்து வந்தனர். கோவில் வளாகத்தில் மலைவாழ் மக்கள் திருச்சப்பரத்திற்கு மண்டகபடி அமைத்து சிறப்பு வழிபாடு செய்தபின், கோவில் வளாகத்தைச் சுற்றி வந்து கோவிலில் கோபுரத்திற்கு பதிலாக சப்பரத்தை வைத்தனர்.

இதனை தொடர்ந்து, திருமூர்த்தி மலையில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நான்கு கால பூஜைகளும், அதனை தொடர்ந்து மும்மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற உள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...