கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியை அதிமுகவிற்கு வழங்க வலியுறுத்தி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!

கோவை: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியை அதிமுகவிற்கு வழங்க வேண்டும் எனவும் இல்லையெனில் அனைத்து நிர்வாகிகளும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யப் போவதாக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியை அதிமுகவிற்கு வழங்க வேண்டும் எனவும் இல்லையெனில் அனைத்து நிர்வாகிகளும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யப் போவதாக அதிமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த அம்மன் அர்ஜுனன் இருந்து வருகிறார். இந்நிலையில், இந்த தொகுதியினை கூட்டணிக் கட்சியான பாஜகவிற்கு ஒதுக்க அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார். எனவே, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியினை கட்டாயம் ஒதுக்க வேண்டும் என பாஜகவினர் அதிமுக தலைமையை வலியுறுத்தி வருகின்றனர். பா.ஜ.கவின் நிர்ப்பந்தத்தைத் தொடர்ந்து, கோவை தெற்கு தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.



இந்த நிலையில், இதனையறிந்த அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 5 பகுதி செயலாளர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட கிளை செயலாளர்கள் அனைவரும் ராஜினாமா கடிதத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், சட்டையை கழற்றி தரையில் படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர், தற்போதைய எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனனுக்கே இந்த தொகுதியினை மீண்டும் வழங்க வேண்டும் எனவும், கூட்டணி கட்சியினருக்கு இந்த தொகுதியினை வழங்கினால் அனைத்து நிர்வாகிகளும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வதை தவிர வேறு வழியில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசப்படுத்தினர்.



அதிமுக நிர்வாகிகளின் போராட்டம் காரணமாக கோவை அதிமுக அலுவலகத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...