கோவை: கோவையில் வழக்கறிஞர் தம்பதி வீட்டில் பூட்டை உடைத்து 8 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் வழக்கறிஞர் தம்பதி வீட்டில் பூட்டை உடைத்து 8 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குனியமுத்தூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடிவருகின்றனர்.
கோவை குனியமுத்தூர் மணிகண்டன் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (48), இவரது மனைவி சாந்தா (40) இருவரும் வக்கீலாக உள்ளனர். இவர்கள் சபரிபாளையத்தில் ஒரு வீடு வாங்கி உள்ளனர். தற்போது அந்த வீடு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதனால் பராமரிப்பு பணிக்காக தம்பதிகள் கடந்த 25 நாட்களாக அங்கேயே தங்கினார். மணிகண்டன் நகரில் உள்ள வீட்டை ஒரு மூதாட்டி ஒருவர் கவனித்து வந்தார். அதன் பின்னர் அவர்களது உறவினர்கள் அடிக்கடி வந்து பார்த்து வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விஜயகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் மனைவியுடன் வீட்டிற்கு வந்து பார்த்தார்.
அப்போது, மெத்தைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த 8 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தனர்.
மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் சகிதமாக தடயங்களை சேகரித்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை குனியமுத்தூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடிவருகின்றனர்.
கோவை குனியமுத்தூர் மணிகண்டன் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (48), இவரது மனைவி சாந்தா (40) இருவரும் வக்கீலாக உள்ளனர். இவர்கள் சபரிபாளையத்தில் ஒரு வீடு வாங்கி உள்ளனர். தற்போது அந்த வீடு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதனால் பராமரிப்பு பணிக்காக தம்பதிகள் கடந்த 25 நாட்களாக அங்கேயே தங்கினார். மணிகண்டன் நகரில் உள்ள வீட்டை ஒரு மூதாட்டி ஒருவர் கவனித்து வந்தார். அதன் பின்னர் அவர்களது உறவினர்கள் அடிக்கடி வந்து பார்த்து வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விஜயகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் மனைவியுடன் வீட்டிற்கு வந்து பார்த்தார்.
அப்போது, மெத்தைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த 8 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தனர்.
மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் சகிதமாக தடயங்களை சேகரித்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.