முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 4 சவரன் நகை பறிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி சாந்தி (53). இவர், கடந்த வாரம் தேவம்பாளையம் பகுதியில் உள்ள தனது சகோதரர் வீட்டுக்கு வந்தார். வீட்டிற்கு  வெளியே நின்று கொண்டிருந்த போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சாந்தியிடம் முகவரி கேட்டனர். சாந்தி தான் ஊருக்கு புதிது என்று சொல்லும் போது, அந்த வாலிபர்கள் சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடினர். இது குறித்து அவர் கோவில்பாளையம் போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அப்பகுதியில் பொருத்தியிருந்த சிசிடிவி காமிரக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில்  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...