பிரிந்து வாழும் மனைவியை அரிவாளால் வெட்டி விட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த ஜவுளி வியாபாரி: கோவையில் பரபரப்பு!

கோவை: கோவையில் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் இன்று மனைவியை சேர்ந்து வாழ கணவர் அழைத்தார். வர மறுத்த மனைவியை ஜவுளி வியாபாரி அரிவாளால் வெட்டி விட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவையில் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் இன்று மனைவியை சேர்ந்து வாழ கணவர் அழைத்தார். வர மறுத்த மனைவியை ஜவுளி வியாபாரி அரிவாளால் வெட்டி விட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை துடியலூர் என்.ஜி.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் ரவி (வயது 50). துணி வியாபாரியான இவருக்கு கல்பனா என்ற மனைவியும் அஜித், கோகுல் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கல்பனா தனது கணவரைப் பிரிந்து அதே பகுதியில் தனியாக ஒரு வீடு எடுத்து வசித்து வந்தார். இன்று காலை கல்பனா பால் வாங்குவதற்காக சென்று கொண்டிருந்தபோது ரவி மீண்டும் அவரை தன்னுடன் வாழ வருமாறு அழைத்தார்.

அப்போது கல்பனா மறுக்கவே அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதையடுத்து அங்கிருந்து தப்பி ஓடிய அவர் போலீசார் பிடித்து சிறையில் அடைத்து விடுவார்களோ என்று பயந்தார். இதையடுத்து மேட்டுப்பாளையத்தில் உள்ள ரயில்வே தண்டவாளப் பகுதிக்கு சென்ற அவர் அந்த வழியாக வந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசார் மற்றும் அந்த எல்லைக்குட்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...