பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த புரவிபாளையத்தில் தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒரு கிலோ தங்க நகை சிக்கியது. உரிய ஆவணங்கள் இருந்ததால் அவை திருப்பி ஒப்படைக்கப்பட்டது.
பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த புரவிபாளையத்தில் தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒரு கிலோ தங்க நகை சிக்கியது. உரிய ஆவணங்கள் இருந்ததால் அவை திருப்பி ஒப்படைக்கப்பட்டது.
பொள்ளாச்சி அருகே புரவிபாளையத்தில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கேரளாவில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது அதில் ஒரு கிலோ தங்கநகை இருப்பது தெரியவந்தது. சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் குழு, தங்க நகைகளை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் வைத்தியநாதனிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து கேரளாவில் இருந்து நகை எடுத்து வந்த கடை ஊழியர் சஜீ என்பவரிடம் விசாரணை செய்ததில், கேரள மாநிலம் அருகே ஒட்டப்பள்ளம் என்ற இடத்தில் இருந்து பொள்ளாச்சியில் இருக்கும் பிரபல நகைக் கடைக்கு இந்த நகைகளை எடுத்து வந்தது தெரியவந்தது. பின்னர் தேர்தல் குழு அதிகாரிகள் அவரிடம் உள்ள ஆவணங்களை சரிபார்த்து, அந்த நகைகளை அவரிடமே திருப்பி ஒப்படைத்தனர்.
பொள்ளாச்சி அருகே புரவிபாளையத்தில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கேரளாவில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது அதில் ஒரு கிலோ தங்கநகை இருப்பது தெரியவந்தது. சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் குழு, தங்க நகைகளை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் வைத்தியநாதனிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து கேரளாவில் இருந்து நகை எடுத்து வந்த கடை ஊழியர் சஜீ என்பவரிடம் விசாரணை செய்ததில், கேரள மாநிலம் அருகே ஒட்டப்பள்ளம் என்ற இடத்தில் இருந்து பொள்ளாச்சியில் இருக்கும் பிரபல நகைக் கடைக்கு இந்த நகைகளை எடுத்து வந்தது தெரியவந்தது. பின்னர் தேர்தல் குழு அதிகாரிகள் அவரிடம் உள்ள ஆவணங்களை சரிபார்த்து, அந்த நகைகளை அவரிடமே திருப்பி ஒப்படைத்தனர்.