திருப்பூர்: திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் உரிய உரிமம் இல்லாமல் கொண்டு வரப்பட்ட 60 கிலோ வெண்கலச் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பூர்: திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் உரிய உரிமம் இல்லாமல் கொண்டு வரப்பட்ட 60 கிலோ வெண்கலச் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் உள்ள குளத்துபாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தில் உரிய உரிமம் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 60 கிலோ எடையுள்ள வெண்கலச் சிலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. உரிய உரிமம் இல்லாத காரணத்தால் தேர்தல் பறக்கும் படையினர் அவற்றை பறிமுதல் செய்து திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
திருப்பூரில் இருந்து பெங்களூரு கொண்டு செல்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டதாக வாகனத்தை ஓட்டி வந்த முகமது ரசூல் தெரிவித்தார். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் சிலைகளை திருப்பூர் வடக்கு காவல் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. உரிமம் இல்லாமல் கொண்டுவரப்பட்ட சிலைகள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.