நீலகிரி: குன்னூர் அருகே வீடுகளுக்கு குழாய்கள் மூலம் விநியோகப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி: குன்னூர் அருகே வீடுகளுக்கு குழாய்கள் மூலம் விநியோகப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குன்னூர் குமரன் நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த மூன்று வாரங்களாக இங்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து கடும் துர்நாற்றம் வீசி வருவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது குறித்து, நகராட்சி அதிகாரிகளுக்கு நேரடியாக புகார் கூறியும் அலட்சியமான பதிலை தெரிவிப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த நீரை பயன்படுத்தும் இப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்கும் போது நகராட்சி ஊழியர்கள், எந்த இடத்தில் கழிவுநீர் கலக்கிறது என்பதை ஆய்வு செய்து வருவதாகவும், கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் மிக விரைவில் கண்டுபிடித்து சரிசெய்வதாக உறுதி அளித்தனர்.