துடியலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆய்வு.
கோவை: கோவை, துடியலூர் அருகே பன்னிமடையில் கடந்த 2019 ம் ஆண்டு மார்ச் மாதம்7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்,சென்னைஉயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்றுபன்னிமடை கிராமத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக சந்தோஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சிறுமி உடலில் இருந்து எடுக்கப்பட்ட விந்தணுவை டி.என்.ஏசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அதில் சந்தோஷ் அல்லாது இருவரின் விந்தணுக்கள் இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையின் முடிவில் கடந்த 2020 டிசம்பர் 27 ம் தேதி குற்றவாளி சந்தோஷ்குமாருக்குதூக்கு தண்டணை விதிக்கப்பட்டது.இதில், தொடர்புடைய மற்றொரு நபர் யார்? என்பது குறித்து துடியலூர் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சந்மோஷ்குமாருக்குதூக்குதண்டணை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்துசென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில்,சென்னை உயர்நீதிமன்றநீதிபதிகள் இன்றுபன்னிமடை கிராமத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிரகாஷ், சிவஞானம் ஆகியஇருவரும் தற்போது நேரில் பன்னிமடை கிராமத்தில் விசாரணை மேற்கொண்டனர். இறந்தசிறுமியின் வீடு மற்றும் அருகில் உள்ள வீடுகளில் இருந்தவர்களிடம் நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் நீதிபதிகள் விசாரணை மேற்கொள்வதால் அந்த பகுதிக்கு ஊடகங்கள் செல்ல கூடாது என இரண்டு கிலோ மீட்டர் முன்னதாகவே பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.