பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாரில் மின்வாரிய ஊழியர்களை தாக்கியது தொடர்பாக விவசாயி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாரில் மின்வாரிய ஊழியர்களை தாக்கியது தொடர்பாக விவசாயி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சி துணைமின் நிலையத்தில் மின்வாரிய ஆய்வாளர்களாக பணியாற்றி வருபவர்கள் கிருஷ்ணசாமி, மணியன். ராஜன் என்பவர் கம்பியாளராக உள்ளார் .நேற்று ஆழியார் அருகே உள்ள புளியங்கண்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி செந்தில்வடிவேல் என்பவர் தனது தோட்டத்தில் மின் இணைப்பு கோளாறு தொடர்பாக மின்வாரிய ஊழியர்களை அழைத்துள்ளார்.
இதையடுத்து அங்கு சென்ற கிருஷ்ணசாமி உள்ளிட்ட மூன்று பேர் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது மின் வாரிய ஊழியர்களுக்கும் தோட்டத்து உரிமையாளர் செந்தில் வடிவேலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த செந்தில் வடிவேல் மின்வாரிய ஊழியர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த மூன்று பேரும் கோட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதையடுத்து மின்வாரிய ஊழியர் கிருஷ்ணசாமி ஆழியார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆழியார் போலீசார் தோட்டத்து உரிமையாளர் செந்தில் வடிவேல் மீது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, அவர்களைத் தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சி துணைமின் நிலையத்தில் மின்வாரிய ஆய்வாளர்களாக பணியாற்றி வருபவர்கள் கிருஷ்ணசாமி, மணியன். ராஜன் என்பவர் கம்பியாளராக உள்ளார் .நேற்று ஆழியார் அருகே உள்ள புளியங்கண்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி செந்தில்வடிவேல் என்பவர் தனது தோட்டத்தில் மின் இணைப்பு கோளாறு தொடர்பாக மின்வாரிய ஊழியர்களை அழைத்துள்ளார்.
இதையடுத்து அங்கு சென்ற கிருஷ்ணசாமி உள்ளிட்ட மூன்று பேர் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது மின் வாரிய ஊழியர்களுக்கும் தோட்டத்து உரிமையாளர் செந்தில் வடிவேலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த செந்தில் வடிவேல் மின்வாரிய ஊழியர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த மூன்று பேரும் கோட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதையடுத்து மின்வாரிய ஊழியர் கிருஷ்ணசாமி ஆழியார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆழியார் போலீசார் தோட்டத்து உரிமையாளர் செந்தில் வடிவேல் மீது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, அவர்களைத் தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.