பொள்ளாச்சி: வரும் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொள்ளாச்சியில் பொதுமக்கள் மத்தியில் திருநங்கைகள் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி: வரும் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொள்ளாச்சியில் பொதுமக்கள் மத்தியில் திருநங்கைகள் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்க உள்ளதால் தமிழக தேர்தல் ஆணையம் பொதுமக்கள் மத்தியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் பல மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இன்று பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் உள்ள திருநங்கைகளுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம் மற்றும் வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்கு இயந்திரத்தைப் பயன்படுத்தி வாக்களிக்கும்முறை குறித்தும் வருவாய்த்துறை அதிகாரிகள் விளக்கினார்.

இதனைத் தொடர்ந்து திருநங்கைகள் தாங்கள் அறிந்துகொண்ட விஷயங்களை தங்கள் சமூகத்தில் உள்ளவர்களுக்கும் பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100 சதவீதம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொள்ளாச்சி நகர்பகுதியில் வலம் வந்து பொதுமக்கள் மத்தியில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர். பின்னர் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் 100 சதவீதம் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்க உள்ளதால் தமிழக தேர்தல் ஆணையம் பொதுமக்கள் மத்தியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் பல மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் உள்ள திருநங்கைகளுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம் மற்றும் வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்கு இயந்திரத்தைப் பயன்படுத்தி வாக்களிக்கும்முறை குறித்தும் வருவாய்த்துறை அதிகாரிகள் விளக்கினார்.
இதனைத் தொடர்ந்து திருநங்கைகள் தாங்கள் அறிந்துகொண்ட விஷயங்களை தங்கள் சமூகத்தில் உள்ளவர்களுக்கும் பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100 சதவீதம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொள்ளாச்சி நகர்பகுதியில் வலம் வந்து பொதுமக்கள் மத்தியில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர். பின்னர் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் 100 சதவீதம் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.