கோவை: வங்கிகள் மற்றும் கூகுள் பே, போன் பே வழியாக நடக்கும் அனைத்து பண பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
கோவை: வங்கிகள் மற்றும் கூகுள் பே, போன் பே வழியாக நடக்கும் அனைத்து பண பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹீ சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை வாகனச் சோதனையில் 14.13 கோடி ரூபாய் ரொக்கம், 38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் என மொத்தம் 15.20 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பணப்பட்டுவாடாவைத் தடுக்க சிறப்பு செலவின பார்வையாளர்களர்களாக இரண்டுபேர் 8-ம் தேதி தமிழகம் வர உள்ளனர்.
வங்கிகள், கூகுள் பே, போன்பே எதுவாக இருந்தாலும் பணப்பரிவர்த்தனை கண்காணிக்கப்படும். சந்தேகத்துக்குரிய முறையில் பணப்பரிவர்த்தனை நடந்தால் யாரிடமிருந்து யாருக்கு பணம் செல்கிறது என்பது கண்காணிக்கப்படும். தவறு நடந்திருப்பது உறுதியானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செலவின பதற்றம் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. எனவே பணப்பரிமாற்றம் முழுமையாகக் கண்காணிக்கப்படும். 'சி விஜில்' மொபைல் ஆப் வழியே பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்கலாம். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹீ சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை வாகனச் சோதனையில் 14.13 கோடி ரூபாய் ரொக்கம், 38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் என மொத்தம் 15.20 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பணப்பட்டுவாடாவைத் தடுக்க சிறப்பு செலவின பார்வையாளர்களர்களாக இரண்டுபேர் 8-ம் தேதி தமிழகம் வர உள்ளனர்.
வங்கிகள், கூகுள் பே, போன்பே எதுவாக இருந்தாலும் பணப்பரிவர்த்தனை கண்காணிக்கப்படும். சந்தேகத்துக்குரிய முறையில் பணப்பரிவர்த்தனை நடந்தால் யாரிடமிருந்து யாருக்கு பணம் செல்கிறது என்பது கண்காணிக்கப்படும். தவறு நடந்திருப்பது உறுதியானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செலவின பதற்றம் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. எனவே பணப்பரிமாற்றம் முழுமையாகக் கண்காணிக்கப்படும். 'சி விஜில்' மொபைல் ஆப் வழியே பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்கலாம். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.