தேர்தல் பணியில் ஈடுபட கூடிய அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு உடனே கொரோனா தடுப்பூசி - கலெக்டர் அறிவுரை.
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட பலர் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளனர். அவ்வாறு, சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு, கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது.
இந்த நிலையில் அவர்களுக்கு உடனடியாக கொரோனா தடுப்பு ஊசி எடுத்துக்கொள்ள கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராஜாமணி அறிவுரை வழங்கியுள்ளார். அதற்கான, முதற்கட்ட பணியும் தொடங்குவதாகவும் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஓட்டுப்பதிவு முதல் ஓட்டு எண்ணிக்கை வரை, 28 ஆயிரம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மத்திய - மாநில அரசு பணிணயாளர்கள், வங்கி மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு பணியில், 4,000 போலீசார் ஈடுபட இருக்கின்றனர். இவர்களுக்கு, அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், கொரோனா தடுப்பூசி போட உத்தரவிடப்பட்டுள்ளது.
இம்முகாம், 25 ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள், தங்களது ஆதார் அட்டை, அலுவலக அடையாள அட்டை மற்றும் மருத்துவ ஆவணங்கள் இருப்பின், அவற்றை காண்பித்து, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனவும், தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமென, மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் ஆட்சியர் ராஜாமணி அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் அவர்களுக்கு உடனடியாக கொரோனா தடுப்பு ஊசி எடுத்துக்கொள்ள கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராஜாமணி அறிவுரை வழங்கியுள்ளார். அதற்கான, முதற்கட்ட பணியும் தொடங்குவதாகவும் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஓட்டுப்பதிவு முதல் ஓட்டு எண்ணிக்கை வரை, 28 ஆயிரம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மத்திய - மாநில அரசு பணிணயாளர்கள், வங்கி மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு பணியில், 4,000 போலீசார் ஈடுபட இருக்கின்றனர். இவர்களுக்கு, அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், கொரோனா தடுப்பூசி போட உத்தரவிடப்பட்டுள்ளது.
இம்முகாம், 25 ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள், தங்களது ஆதார் அட்டை, அலுவலக அடையாள அட்டை மற்றும் மருத்துவ ஆவணங்கள் இருப்பின், அவற்றை காண்பித்து, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனவும், தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமென, மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் ஆட்சியர் ராஜாமணி அறிவுறுத்தியுள்ளார்.