வால்பாறை: வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானைகள் முற்றுகையிட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.
வால்பாறை: வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானைகள் முற்றுகையிட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.
கோவை மாவட்டம் வால்பாறையில் பல்வேறு தேயிலைத் தோட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த காட்டு யானைகள் தொழிலாளர்களின் குடியிருப்புகளில் புகுந்து வீடுகள் கடைகள் சத்துணவுக் கூடங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களை இடித்து சேதப்படுத்தி வருகின்றன. வனத்துறையினரும், தேயிலைத் தோட்ட காவலர்களும் இணைந்து காட்டு யானைகளை விரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஈட்டியார் தேயிலைத் தோட்டத்துக்குள் புகுந்தன. அவை காலையிலிருந்து தொடர்ந்து அப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறிப்பது மற்றும் மருந்தடிக்கும் பணிகள் பாதிப்படைந்தன.

காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க வனத்துறையினரும், தேயிலை தோட்ட காவலர்களும் தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொண்டு காட்டு யானைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் .
கோவை மாவட்டம் வால்பாறையில் பல்வேறு தேயிலைத் தோட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த காட்டு யானைகள் தொழிலாளர்களின் குடியிருப்புகளில் புகுந்து வீடுகள் கடைகள் சத்துணவுக் கூடங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களை இடித்து சேதப்படுத்தி வருகின்றன. வனத்துறையினரும், தேயிலைத் தோட்ட காவலர்களும் இணைந்து காட்டு யானைகளை விரட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஈட்டியார் தேயிலைத் தோட்டத்துக்குள் புகுந்தன. அவை காலையிலிருந்து தொடர்ந்து அப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறிப்பது மற்றும் மருந்தடிக்கும் பணிகள் பாதிப்படைந்தன.
காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க வனத்துறையினரும், தேயிலை தோட்ட காவலர்களும் தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொண்டு காட்டு யானைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் .