கோவை: வால்பாறை அருகே குடியிருப்புகளில் புகுந்து அட்டகாசம் செய்து வரும் சிங்கவால் குரங்குகளால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கோவை: வால்பாறை அருகே குடியிருப்புகளில் புகுந்து அட்டகாசம் செய்து வரும் சிங்கவால் குரங்குகளால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள புது தோட்டம் எஸ்டேட் பகுதியில் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பங்களுடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட அரியவகை இனமான சிங்கவால் குரங்குகள் கூட்டம் கூட்டமாக தொழிலாளர்களின் குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன.

குறிப்பாக, தொழிலாளர்களின் வீடுகளின் கூரைகளை பிரித்தெறிந்து உள்ளே புகுந்து, வீட்டிலுள்ள அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள் சமைத்து வைத்திருக்கும் பானையோடு சாப்பாடு ஆகியவற்றை தின்று நாசப்படுத்துவதோடு தூக்கிச் சென்று விடுகின்றன.
மேலும், பானைகளில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் நகை, பணம் போன்ற பொருள்களையும் தூக்கிச் சென்று விடுகின்றன. இதனால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
இந்த நிலையில், சிங்கவால் குரங்குகளால் தொழிலாளர்கள் பாதிப்படைவதை தடுத்திட வனத்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள புது தோட்டம் எஸ்டேட் பகுதியில் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பங்களுடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட அரியவகை இனமான சிங்கவால் குரங்குகள் கூட்டம் கூட்டமாக தொழிலாளர்களின் குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன.
குறிப்பாக, தொழிலாளர்களின் வீடுகளின் கூரைகளை பிரித்தெறிந்து உள்ளே புகுந்து, வீட்டிலுள்ள அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள் சமைத்து வைத்திருக்கும் பானையோடு சாப்பாடு ஆகியவற்றை தின்று நாசப்படுத்துவதோடு தூக்கிச் சென்று விடுகின்றன.
மேலும், பானைகளில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் நகை, பணம் போன்ற பொருள்களையும் தூக்கிச் சென்று விடுகின்றன. இதனால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
இந்த நிலையில், சிங்கவால் குரங்குகளால் தொழிலாளர்கள் பாதிப்படைவதை தடுத்திட வனத்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.