வால்பாறை அருகே குடியிருப்பு பகுதிகளில் புகுந்து சிங்கவால் குரங்குகள் அட்டகாசம்..!

கோவை: வால்பாறை அருகே குடியிருப்புகளில் புகுந்து அட்டகாசம் செய்து வரும் சிங்கவால் குரங்குகளால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


கோவை: வால்பாறை அருகே குடியிருப்புகளில் புகுந்து அட்டகாசம் செய்து வரும் சிங்கவால் குரங்குகளால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள புது தோட்டம் எஸ்டேட் பகுதியில் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பங்களுடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட அரியவகை இனமான சிங்கவால் குரங்குகள் கூட்டம் கூட்டமாக தொழிலாளர்களின் குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன.



குறிப்பாக, தொழிலாளர்களின் வீடுகளின் கூரைகளை பிரித்தெறிந்து உள்ளே புகுந்து, வீட்டிலுள்ள அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள் சமைத்து வைத்திருக்கும் பானையோடு சாப்பாடு ஆகியவற்றை தின்று நாசப்படுத்துவதோடு தூக்கிச் சென்று விடுகின்றன.

மேலும், பானைகளில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் நகை, பணம் போன்ற பொருள்களையும் தூக்கிச் சென்று விடுகின்றன. இதனால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

இந்த நிலையில், சிங்கவால் குரங்குகளால் தொழிலாளர்கள் பாதிப்படைவதை தடுத்திட வனத்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...