கோவை: கோவையில் பட்டா மாறுதலுக்காக லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை: கோவையில் பட்டா மாறுதலுக்காக லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் தனக்குச் சொந்தமான நிலத்துக்கு பட்டா மாறுதல் கோரி பன்னிமடை கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார். ஆனால் பட்டா மாறுதலுக்கு கையெழுத்திட, கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதனால் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசில் கார்த்திக் புகார் செய்தார். இதற்கிடையே பட்டா மாறுதலுக்கு ரூ.7 ஆயிரம் தருவதாக சிவக்குமாரிடம் கூறி உள்ளார்.

இதையடுத்து ரசாயனம் தடவிய நோட்டுகளை கார்த்திக் சிவக்குமாரிடம் கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சிவக்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் லஞ்சம் வாங்க உறுதுணையாக இருந்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவல உதவியாளர் பழனிச்சாமி என்பவரையும் போலீசார் கைது செய்து இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் தனக்குச் சொந்தமான நிலத்துக்கு பட்டா மாறுதல் கோரி பன்னிமடை கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார். ஆனால் பட்டா மாறுதலுக்கு கையெழுத்திட, கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதனால் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசில் கார்த்திக் புகார் செய்தார். இதற்கிடையே பட்டா மாறுதலுக்கு ரூ.7 ஆயிரம் தருவதாக சிவக்குமாரிடம் கூறி உள்ளார்.
இதையடுத்து ரசாயனம் தடவிய நோட்டுகளை கார்த்திக் சிவக்குமாரிடம் கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சிவக்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் லஞ்சம் வாங்க உறுதுணையாக இருந்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவல உதவியாளர் பழனிச்சாமி என்பவரையும் போலீசார் கைது செய்து இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.