18 வயதுக்குக் குறைவானவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவதில்லை: கோவை மருத்துவக் கல்லூரி டீன் நிர்மலா விளக்கம்!

கோவை: 18 வயதுக்குக் குறைவானவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவதில்லை என்று கோவை மருத்துவக் கல்லூரி டீன் நிர்மலா விளக்கமளித்துள்ளார்.


கோவை: 18 வயதுக்குக் குறைவானவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவதில்லை என்று கோவை மருத்துவக் கல்லூரி டீன் நிர்மலா விளக்கமளித்துள்ளார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள யாரெல்லாம் தகுதியானவர்கள் என்று கோவை மருத்துவக் கல்லூரி டீன் நிர்மலா விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

கொரோனா சிகிச்சை பெறுபவர்கள், கடுமையான பிற நோய்த் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டவர்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், 18 வயதுக்குக் குறைவானவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு தடுப்பூசி போடப்படுவது இல்லை. 45 முதல் 50 வயது வரை உள்ள சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பு கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிசெய்யும் மருத்துவச் சான்றிதழ் கொடுக்க வேண்டியது அவசியம்.

தடுப்பூசியால் எந்தவித பிரச்சினையும் இல்லை. ஆனாலும் பிற நோய்களால் ஏற்படும் பாதிப்புகள் தடுப்பூசியால்தான் ஏற்பட்டது என்ற தேவையற்ற சிக்கல்கள் உண்டாக வாய்ப்புள்ளதால் மற்ற நோய்த்தொற்று கட்டுப்பாட்டில் உள்ளதற்கான மருத்துவச் சான்று பெறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. முதல் டோஸ் போட்டு 29 நாட்கள் கழித்து எப்போது வேண்டுமானாலும் 2-வது டோஸ் போட்டுக்கொள்ளலாம்.

45 நாட்களுக்கு பிறகு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் மாஸ்க் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கண்டிப்பாக தொடர்ந்து மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசியால் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை. மருத்துவர்கள் ஆகிய நாங்களே இதனை போட்டுக் கொண்டுள்ளோம். தேவையற்ற மூடநம்பிக்கை கருத்துக்களை புறக்கணித்து தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...