கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அருளானந்தம் உள்பட 3 பேருக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வரும் 17-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அருளானந்தம் உள்பட 3 பேருக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வரும் 17-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
பொள்ளாச்சியில், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்த வழக்கில், திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பாக மேலும் மூன்று பெண்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பவத்தில் தொடர்புடைய பொள்ளாச்சி அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் அருளானந்தம், ஹரன்பால், பாபு ஆகியோர் கடந்த டிசம்பர் மாதம் 6-ந்தேதி கைது செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து இவர்களுக்கு முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு கோபிசெட்டிபாளையம் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அருளானந்தத்தை மட்டும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். அதன் பிறகு மீண்டும் கோபிசெட்டிபாளையம் சிறையில் அடைத்தனர். அவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்றுடன் அவர்களுக்கு காவல் முடிவடைந்ததால். நேற்றுமாலை மாலை வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி முன்னிலையில் அவர்கள் 3 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அதைத்தொடர்ந்து மகிளா நீதிமன்ற நீதிபதி வரும் மார்ச் 17-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.
பொள்ளாச்சியில், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்த வழக்கில், திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பாக மேலும் மூன்று பெண்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பவத்தில் தொடர்புடைய பொள்ளாச்சி அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் அருளானந்தம், ஹரன்பால், பாபு ஆகியோர் கடந்த டிசம்பர் மாதம் 6-ந்தேதி கைது செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து இவர்களுக்கு முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு கோபிசெட்டிபாளையம் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அருளானந்தத்தை மட்டும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். அதன் பிறகு மீண்டும் கோபிசெட்டிபாளையம் சிறையில் அடைத்தனர். அவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்றுடன் அவர்களுக்கு காவல் முடிவடைந்ததால். நேற்றுமாலை மாலை வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி முன்னிலையில் அவர்கள் 3 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அதைத்தொடர்ந்து மகிளா நீதிமன்ற நீதிபதி வரும் மார்ச் 17-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.