சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணி: திருப்பூரில் மாநகர போலீசார் மற்றும் துணை ராணுவம் சார்பில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி!

திருப்பூர்: திருப்பூரில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மாநகர போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் இணைந்து கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூரில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மாநகர போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் இணைந்து கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டத்திற்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் (சிஐஎஸ்எப்) வந்துள்ளனர். இவர்களுடன் இணைந்து மாநகர ஆயுதப்படை போலீசார் பங்கேற்ற அணிவகுப்பு திருப்பூர் ரயில் நிலையத்தில் நேற்று தொடங்கியது. இதனை மாநகரக் காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.



இந்த அணிவகுப்பு குமரன் சாலை வழி, மாநகராட்சி, பழைய பேருந்து நிலையம் மற்றும் காங்கயம் சாலை வழியாக சிடிசி முனையத்தில் நடந்தது. பொதுமக்களிடம் அச்சத்தை போக்கவும், சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது.



71 மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள், மாநகர போலீசார் என மொத்தம் 570 பேர் பங்கேற்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...