இரவு 12 மணி ஆனாலும் தேர்தல் பணியாற்ற வேண்டும்: கோவை கலெக்டர் ராஜாமணி தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுரை!

கோவை: தேர்தல் பணி என்பது நமது கடமை. இரவு 12 மணி ஆனாலும் அதைச் சிறப்பாக செய்ய வேண்டும் என தேர்தல் பணி குறித்த அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தின்போது அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


கோவை: தேர்தல் பணி என்பது நமது கடமை. இரவு 12 மணி ஆனாலும் அதைச் சிறப்பாக செய்ய வேண்டும் என தேர்தல் பணி குறித்த அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தின்போது அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

சட்டசபை தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. டி.ஆர்.ஓ. ராமதுரை முருகன் முன்னிலை வகித்தார். இதில் கலெக்டர் ராஜாமணி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

'சட்டசபை தேர்தல் பணி என்பதை, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனைவரும் மூளையில் பதிவு செய்து கொள்ளுங்கள். தினமும் வேலைக்கு வருகிறோம். சில வேலைகளை நாளை செய்யலாம் என ஒத்திவைப்போம்.தேர்தல் பணி அப்படியல்ல, நள்ளிரவு 12 மணியானாலும் செய்தாக வேண்டும். செய்ய வேண்டியது கடமை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

சில அதிகாரிகள், தேர்தல் பணியில் அக்கறையின்றி இருக்கிறீர்கள். குறுகிய நாட்களே இருக்கின்றன. தேர்தல் வேலைக்குள் நுழையுங்கள். எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில், பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண், எஸ்.பி. அருளரசு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா மற்றும் தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Newsletter

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...