இரவு 12 மணி ஆனாலும் தேர்தல் பணியாற்ற வேண்டும்: கோவை கலெக்டர் ராஜாமணி தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுரை!

கோவை: தேர்தல் பணி என்பது நமது கடமை. இரவு 12 மணி ஆனாலும் அதைச் சிறப்பாக செய்ய வேண்டும் என தேர்தல் பணி குறித்த அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தின்போது அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


கோவை: தேர்தல் பணி என்பது நமது கடமை. இரவு 12 மணி ஆனாலும் அதைச் சிறப்பாக செய்ய வேண்டும் என தேர்தல் பணி குறித்த அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தின்போது அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

சட்டசபை தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. டி.ஆர்.ஓ. ராமதுரை முருகன் முன்னிலை வகித்தார். இதில் கலெக்டர் ராஜாமணி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

'சட்டசபை தேர்தல் பணி என்பதை, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனைவரும் மூளையில் பதிவு செய்து கொள்ளுங்கள். தினமும் வேலைக்கு வருகிறோம். சில வேலைகளை நாளை செய்யலாம் என ஒத்திவைப்போம்.தேர்தல் பணி அப்படியல்ல, நள்ளிரவு 12 மணியானாலும் செய்தாக வேண்டும். செய்ய வேண்டியது கடமை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

சில அதிகாரிகள், தேர்தல் பணியில் அக்கறையின்றி இருக்கிறீர்கள். குறுகிய நாட்களே இருக்கின்றன. தேர்தல் வேலைக்குள் நுழையுங்கள். எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில், பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண், எஸ்.பி. அருளரசு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா மற்றும் தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...