கோவை: கோவை வடவள்ளி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த டிரைவர் சாலையில் கிடந்த நகைப் பையை போலீசாரிடம் ஒப்படைத்தார். அவருக்கு பாராட்டுகள் குவிகிறது.
கோவை: கோவை வடவள்ளி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த டிரைவர் சாலையில் கிடந்த நகைப் பையை போலீசாரிடம் ஒப்படைத்தார். அவருக்கு பாராட்டுகள் குவிகிறது.
கோவை வடவள்ளி வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் விஜய். டிரைவரான இவர் கடந்த, 28-ம் தேதி காலை 6 மணிக்கு டீ குடிப்பதற்காக வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் பை ஒன்று கிடந்தது. அதை எடுத்துப் பார்த்தபோது அதில் மூன்றே கால் சவரன் நகை இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக அந்த நகையை வடவள்ளி இன்ஸ்பெக்டர் சிவகுமாரிடம் டிரைவர் விஜய் ஒப்படைத்தார். விஜய்க்கு போலீசார் பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தனர். இதேபோல் பொதுமக்களும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். நகையைத் தொலைத்தவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் வடவள்ளி காவல் நிலையத்துக்குச் சென்று, நகையை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
கோவை வடவள்ளி வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் விஜய். டிரைவரான இவர் கடந்த, 28-ம் தேதி காலை 6 மணிக்கு டீ குடிப்பதற்காக வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் பை ஒன்று கிடந்தது. அதை எடுத்துப் பார்த்தபோது அதில் மூன்றே கால் சவரன் நகை இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக அந்த நகையை வடவள்ளி இன்ஸ்பெக்டர் சிவகுமாரிடம் டிரைவர் விஜய் ஒப்படைத்தார். விஜய்க்கு போலீசார் பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தனர். இதேபோல் பொதுமக்களும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். நகையைத் தொலைத்தவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் வடவள்ளி காவல் நிலையத்துக்குச் சென்று, நகையை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.