கோவையில் சாலையில் கண்டெடுத்த நகையை போலீசில் ஒப்படைத்த டிரைவருக்கு பாராட்டு குவிகிறது!

கோவை: கோவை வடவள்ளி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த டிரைவர் சாலையில் கிடந்த நகைப் பையை போலீசாரிடம் ஒப்படைத்தார். அவருக்கு பாராட்டுகள் குவிகிறது.


கோவை: கோவை வடவள்ளி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த டிரைவர் சாலையில் கிடந்த நகைப் பையை போலீசாரிடம் ஒப்படைத்தார். அவருக்கு பாராட்டுகள் குவிகிறது.

கோவை வடவள்ளி வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் விஜய். டிரைவரான இவர் கடந்த, 28-ம் தேதி காலை 6 மணிக்கு டீ குடிப்பதற்காக வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் பை ஒன்று கிடந்தது. அதை எடுத்துப் பார்த்தபோது அதில் மூன்றே கால் சவரன் நகை இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாக அந்த நகையை வடவள்ளி இன்ஸ்பெக்டர் சிவகுமாரிடம் டிரைவர் விஜய் ஒப்படைத்தார். விஜய்க்கு போலீசார் பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தனர். இதேபோல் பொதுமக்களும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். நகையைத் தொலைத்தவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் வடவள்ளி காவல் நிலையத்துக்குச் சென்று, நகையை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...