வாகன நிறுத்துமிடம், கட்டண கழிப்பிடத்தில் அதிக கட்டணம் வசூல்- அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை


கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட எம்டிபி ரோடு புதிய பேருந்து நிலையத்திலுள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்திலும், நவீன கட்டண கழிப்பிடத்திலும் அதிக கட்டணம் வசூல் செய்த குத்தைகைதாரர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில், உதவி வருவாய் அலுவலர் மற்றும் சிறப்பு வரி ஆய்வாளர் ஆகியோர் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட எம்டிபி ரோடு புதிய பேருந்து நிலையத்திலுள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்திலும், நவீன கட்டண கழிப்பிடத்திலும் செப்டம்பர் 7 மற்றும் நவம்பர் 12 ஆகிய தேதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது, வாகன கட்டணம் விபரப் பெயர் பலகை வைக்கப்படாதது குறித்து ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பெயர் பலகை வைக்கும் படி அறிவுத்தப்பட்டது.

மேலும், நவ. 15 ம் தேதியன்று ஆய்வு செய்யப்பட்ட போதிலும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்திலும், நவீன கட்டண கழிப்பிடத்திலும் கட்டண பெயர் பலகை வைக்கப்படவில்லை. 

மேலும், அதிக கட்டணம் வசூல் செய்த இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன குத்தைகைதாரர் சாந்தகுமார் என்பவருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி அபராதமாக ரூ.20 ஆயிரம், நவீன கட்டண கழிப்பிடத்தின் குத்தைகைதாரர் ஜமேஷா என்பவருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், இது போன்ற தவறுகள் தொடரப்பட்டால் குத்தகைதாரர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு அவர்களுடைய பெயர்களை கருப்பு பட்டியலில் சேர்ப்பதுடன், செலுத்திய தொகைகள் பறிமுதல் செய்யப்பட்டு மாநகராட்சி நிதியில் சேர்க்கப்பட்டும் என்றும் அந்த இடத்தின பொது மின் ஏலத்தில் விடப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...