கோவை: கோவையில் வாடகைதாரர் ஆக உள்ள குறுந்தொழில் கூட இடப்பிரச்சினை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள சூழலில் 30-க்கும் மேற்பட்ட குண்டர்கள் தாக்குதலில் ஈடுபட்டதற்கு டேக்ட் தொழில் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவை: கோவையில்வாடகைதாரர் ஆக உள்ள குறுந்தொழில் கூட இடப்பிரச்சினை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள சூழலில் 30-க்கும் மேற்பட்ட குண்டர்கள் தாக்குதலில் ஈடுபட்டதற்கு டேக்ட் தொழில் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் 'டேக்ட்' தலைவர் ஜேம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
கோவை தடாகம் சாலையில் உள்ள டி.வி.எஸ்.நகர் பகுதியில் பத்தாண்டுகளாக குறுந்தொழில் நடத்தி வரும் ஸ்ரீ மகா என்ஜினீயரிங் ஒர்க்ஸ் தொழில் முனைவோருக்கு 2.3.2021 மோசமான நாளாக அமைந்தது. 30-க்கும் மேற்பட்டோர் குண்டர் படையுடன் சேலத்தில் இருந்து வந்து தொழில்கூடத்தை சின்னாபின்னமாக்கி விட்டார்கள். சம்பந்தப்பட்ட இடப்பிரச்சனை கோர்ட்டில் இருந்துவரும் நிலையில், வாடகைதாரரான குறுந்தொழில் முனைவோரின் தொழில்கூடத்தை நாசம் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து 100-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் இணைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் வந்தும் சம்பந்தப்பட்ட நபர் அனைவரையும் அச்சுறுத்தும்விதமாக பேசுகிறார்.
துடியலூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் காவல்துறையினர் எண்ணிக்கை குறைந்த அளவில் இருப்பதாலும் காவல்நிலையத்துக்கு உட்பட்ட எல்லைப்பகுதி பெரும்பகுதியாக இருப்பதாலும் இதுபோன்ற பிரச்சினைகளை விசாரிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.
கோர்ட்டில் வழக்கு இருக்கும் நிலையில் சேலத்திலிருந்து 30-க்கும் மேற்பட்டோரை அழைத்துவந்து அத்துமீறி தொழிற்சாலையை நாசம் செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோவை குறுந்தொழில் அமைப்பான டேக்ட் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. விசாரணைஇன்றுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது போன்ற பிரச்சினைகள் வருகின்ற பொழுது உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம். தொழில்முனைவோரைப் பாதுகாக்க கோவையில் உள்ள தொழில் முனைவோர் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் 'டேக்ட்' தலைவர் ஜேம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
கோவை தடாகம் சாலையில் உள்ள டி.வி.எஸ்.நகர் பகுதியில் பத்தாண்டுகளாக குறுந்தொழில் நடத்தி வரும் ஸ்ரீ மகா என்ஜினீயரிங் ஒர்க்ஸ் தொழில் முனைவோருக்கு 2.3.2021 மோசமான நாளாக அமைந்தது. 30-க்கும் மேற்பட்டோர் குண்டர் படையுடன் சேலத்தில் இருந்து வந்து தொழில்கூடத்தை சின்னாபின்னமாக்கி விட்டார்கள். சம்பந்தப்பட்ட இடப்பிரச்சனை கோர்ட்டில் இருந்துவரும் நிலையில், வாடகைதாரரான குறுந்தொழில் முனைவோரின் தொழில்கூடத்தை நாசம் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து 100-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் இணைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் வந்தும் சம்பந்தப்பட்ட நபர் அனைவரையும் அச்சுறுத்தும்விதமாக பேசுகிறார்.
துடியலூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் காவல்துறையினர் எண்ணிக்கை குறைந்த அளவில் இருப்பதாலும் காவல்நிலையத்துக்கு உட்பட்ட எல்லைப்பகுதி பெரும்பகுதியாக இருப்பதாலும் இதுபோன்ற பிரச்சினைகளை விசாரிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.
கோர்ட்டில் வழக்கு இருக்கும் நிலையில் சேலத்திலிருந்து 30-க்கும் மேற்பட்டோரை அழைத்துவந்து அத்துமீறி தொழிற்சாலையை நாசம் செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோவை குறுந்தொழில் அமைப்பான டேக்ட் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. விசாரணைஇன்றுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது போன்ற பிரச்சினைகள் வருகின்ற பொழுது உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம். தொழில்முனைவோரைப் பாதுகாக்க கோவையில் உள்ள தொழில் முனைவோர் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.