தேர்தல் நேரத்தில் ரவுடிகள் குற்றச்செயலில் ஈடுபட்டால் சிறை: கோவை துணை ஆணையர் எச்சரிக்கை!

கோவை: கோவை மாவட்டத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டு கைதாகி சிறை சென்று ஜாமீனில் வெளியே உள்ள குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணைய பத்திரம் வாங்கப்பட்டுள்ளது. மீறி குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என துணை ஆணையர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டு கைதாகி சிறை சென்று ஜாமீனில் வெளியே உள்ள குற்றவாளிகளிடம் நன்னடத்தை பிணைய பத்திரம் வாங்கப்பட்டுள்ளது. மீறி குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என துணை ஆணையர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கோவை மாவட்டம் முழுவதும் உள்ள முன்னாள், இந்நாள் ரவுடிகள் 3-க்கும் மேற்பட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளவர்கள் என அனைத்து குற்றவாளிகளையும் பற்றிய தகவல்களைச் சேகரித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்தல் அமைதியாக நடைபெறவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் தமிழக காவல்துறை பல்வேறுவிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் மிரட்டுவது, பணப்பட்டுவாடா செய்வது போன்ற காரியங்களில் ரவுடிகள் ஈடுபட அதிக வாய்ப்பு உள்ளது என்பதால் கோவை மாநகரின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கோவை நகரில் ஏற்கனவே பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய ரவுடிகள் 204 பேர் மற்றும் திருட்டு, கொள்ளை உள்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 40 பேர் என 253 ரவுடிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். அவரிடம் நன்னடத்தை பிணையப்பத்திரம் பெறப்பட்டுள்ளது. இதை மீறி சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அவர்கள் செயல்பட்டால் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார் என கோவை போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...