பொள்ளாச்சி ஏ.டி.எம்,மில் பணம் எடுத்து தருவதாகக் கூறி மூதாட்டியிடம் ரூ. 40 ஆயிரம் அபேஸ்!

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் ஏ.டி.எம்,மில் பணம் எடுத்து தருவதாகக் கூறி மூதாட்டியிடம் 40 ஆயிரம் ரூபாயை மர்ம ஆசாமி திருடினார்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் ஏ.டி.எம்,மில் பணம் எடுத்து தருவதாகக் கூறி மூதாட்டியிடம் 40 ஆயிரம் ரூபாயை மர்ம ஆசாமி திருடினார்.

பொள்ளாச்சி ஆச்சிபட்டி சேரன் நகரைச் சேர்ந்தவர் ராமசாமி. ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியரான இவரது மனைவி மகாலட்சுமி (வயது 65). இவர் நேற்று மதியம் தனது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்காக பொள்ளாச்சி காந்தி சிலை அருகே உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம். சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு நபரிடம் பணம் எடுத்துத் தருமாறு உதவி கேட்டுள்ளார். அந்த நபர் மகாலட்சுமியின் ஏ.டி.எம் ரகசிய எண்ணை பெற்றுக்கொண்டு, வங்கியிலிருந்து பணம் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மகாலட்சுமி ஏ.டி.எம் கார்டுக்குப் பதிலாக அவரது ஏ.டி.எம் கார்டை கொடுத்துவிட்டு மாயமாகியுள்ளார். இந்நிலையில் சிறிது நேரத்தில், மகாலட்சுமியின் வங்கி கணக்கிலிருந்து, ரூபாய் 40 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்ததையடுத்து மூதாட்டி பதற்றமடைந்தார். உடனடியாக இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதனடிப்படையில் மர்ம நபரின் ஏ.டி.எம் கார்டு மற்றும் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...