கோவை: கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி பீளமேட்டில் அதிமுக பரிசு பொருட்களுடன் கார் சிறை பிடிக்கப்பட்ட சம்பவத்தில், காலவல்துறையின் உதவியோடு பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
கோவை: கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி பீளமேட்டில் அதிமுக பரிசு பொருட்களுடன் கார் சிறை பிடிக்கப்பட்ட சம்பவத்தில், காலவல்துறையின் உதவியோடு பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பீளமேடு 39வது வார்டு, பீளமேடு மேம்பாலம் அருகே நேரு நகர் பகுதியில் பாஜகவை சேர்ந்த நடராஜன் என்பவரது வீட்டில், அதிமுக வார்டு செயலாளர் மனோகரன் என்பவருக்கு சொந்தமான மாருதி 800 காரில் பொதுமக்களுக்கு வழங்க ஜெயலலிதா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படம் பொறித்த கவரில் வேட்டி, சேலை, சில்வர் தட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த, அப்பகுதி திமுகவினர் மற்றும் பொதுமக்கள் அந்த காரையும், வீட்டையும் சிறை பிடித்தனர். இதுகுறித்து காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை ஆய்வாளர் ஜோதி, அந்த பகுதி அதிமுகவினரிடம், பொருட்களை வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ள கூறியதாக கூறப்படுகிறது.
இதனால், ஆவேசம் அடைந்த திமுகவினர், தேர்தல் அதிகாரியிடத்தில் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரி, ஆனந்தகுமார் காரை பார்வையிட்டார். தொடர்ந்து, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இந்நிலையில், திமுக வெற்றி பெற உள்ள இந்த தொகுதியில் அதிமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி பரிசு பொருட்களை வழங்கி வருவதாகவும், அதிமுக பரிசு பொருட்களை வழங்க துணைபோகும் காவல்துறை ஆய்வாளர் ஜோதியை இடமாற்றம் செய்ய வேண்டும். பிடிப்பட்ட காரை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தொகுதி திமுக பொறுப்பாளரின் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுகவின், தேர்தல் விதிமுறையை மீறும் செயலை கண்டித்து, அப்பகுதியில் பகுதி கழக பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம், வார்டு செயலாளர்கள் மாடசாமி, பிடி.முருகேசன், ஏஎஸ்.நடராஜன், வழக்கறிஞர்கள் மருதுபாண்டி, முத்துவிஜயன், கண்ணன், மற்றும் பாலசந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.