கோவை: கால்நடை பராமரிப்பு உதவிப் பணியாளர் நேர்காணல் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து 350-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கோவை: கால்நடை பராமரிப்பு உதவிப் பணியாளர் நேர்காணல் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து 350-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கோவை டாடாபாத் கணிணி சேவை மையம் முன்பாக கால்நடை பராமரிப்பு உதவிப் பணியாளர்கள் பணிக்கான நேர்காணல் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால் விண்ணப்பதாரர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 4 ஆண்டுகளாக நேர்காணலுக்கான அழைப்பு விடுத்து அதன்பிறகு காரணமில்லாமல் ஒவ்வொரு ஆண்டும் நேர்காணல் ரத்து செய்யப்பட்டது. இந்த வருடமும் எந்த தெளிவான காரணமும் கூறப்படாமல் நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வால்பாறை, பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து நேர்காணலுக்காக வந்து ஒவ்வொரு வருடமும் பெரும் ஏமாற்றமே மிஞ்சுகிறது என்றும், நான்காண்டுகளுக்கான நேர்காணல் கடிதத்தை கையில் ஏந்தி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதற்கான சரியான விளக்கத்தை அரசு அதிகாரிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றும், மேலும் அரசு, பணிகளை நிர்ணயிக்கும்போது புதிய விண்ணப்பதாரர்களை எடுக்கக்கூடாது என்றும், ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

கோவை டாடாபாத் கணிணி சேவை மையம் முன்பாக கால்நடை பராமரிப்பு உதவிப் பணியாளர்கள் பணிக்கான நேர்காணல் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால் விண்ணப்பதாரர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 4 ஆண்டுகளாக நேர்காணலுக்கான அழைப்பு விடுத்து அதன்பிறகு காரணமில்லாமல் ஒவ்வொரு ஆண்டும் நேர்காணல் ரத்து செய்யப்பட்டது. இந்த வருடமும் எந்த தெளிவான காரணமும் கூறப்படாமல் நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வால்பாறை, பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து நேர்காணலுக்காக வந்து ஒவ்வொரு வருடமும் பெரும் ஏமாற்றமே மிஞ்சுகிறது என்றும், நான்காண்டுகளுக்கான நேர்காணல் கடிதத்தை கையில் ஏந்தி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதற்கான சரியான விளக்கத்தை அரசு அதிகாரிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றும், மேலும் அரசு, பணிகளை நிர்ணயிக்கும்போது புதிய விண்ணப்பதாரர்களை எடுக்கக்கூடாது என்றும், ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.