கோவை: இன்றுமுதல் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் 30 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
கோவை: இன்றுமுதல் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் 30 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தரப் பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் போக்குவரத்துதுறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

வழக்கமாக கோவை கோட்டத்தில் 3 ஆயிரம் நகரப் பேருந்துகள், 1500 வெளியூர் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக 30 சதவீத பேருந்துகள் மட்டுமே தற்போதுவரை இயக்கப்பட்டு வருகின்றன.

அ.தி.மு.க. தொழிற்சங்கமான ஏ.பி.டி. தொழிற்சங்கத்தினர் மற்றும் தற்காலிக ஊழியர்கள் பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.

தனியார் பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகின்றன.
ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தரப் பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் போக்குவரத்துதுறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
வழக்கமாக கோவை கோட்டத்தில் 3 ஆயிரம் நகரப் பேருந்துகள், 1500 வெளியூர் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக 30 சதவீத பேருந்துகள் மட்டுமே தற்போதுவரை இயக்கப்பட்டு வருகின்றன.
அ.தி.மு.க. தொழிற்சங்கமான ஏ.பி.டி. தொழிற்சங்கத்தினர் மற்றும் தற்காலிக ஊழியர்கள் பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.
தனியார் பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகின்றன.