ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழாவில் நள்ளிரவில் நடைபெற்ற மயான பூஜை!

பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி நேற்று நள்ளிரவில் மயான பூஜை நடைபெற்றது. அப்போது அருளாளி ஒருவர் எலும்புத் துண்டை வாயில் கவ்வியபடி கையில் சூலாயுதத்துடன் ஆவேசமாக நடனமாடினார்.


பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி நேற்று நள்ளிரவில் மயான பூஜை நடைபெற்றது. அப்போது அருளாளி ஒருவர் எலும்புத் துண்டை வாயில் கவ்வியபடி கையில் சூலாயுதத்துடன் ஆவேசமாக நடனமாடினார்.

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மயான பூஜை புதன்கிழமை நள்ளிரவில் நடந்தது. இதையொட்டி, நள்ளிரவு 12.30 மணிக்கு மாசாணியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் முடிந்தவுடன், மயான அருளாளி அருண், தலைமை முறைதாரர் மனோகரன் உள்பட பல அருளாளிகள் அம்மன் சூலம் மற்றும் பூஜை சாமான்களுடன் ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்துக்குச் சென்றனர்.

அங்கு எட்டு அடி நீளத்துக்கு மயான மண்ணால் மாசாணியம்மனின் உருவம் சயனகோலத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அருளாளி ஆற்றில் நீராடிவிட்டு தீர்த்தம் எடுத்துவந்தார். அதிகாலை 2.30 மணிக்கு பம்பை மேளதாளங்கள் முழங்க அம்மனின் திருஉருவத்தை மறைத்திருந்த திரை விலக்கப்பட்டு, அம்மன் தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. எலுமிச்சை மாலைகளால் அம்மனின் பீடம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பின் பம்பைக்காரர்கள் பக்தி பாடல்கள் பாடினர்.



அருளாளிக்கு அருள் வந்து, அம்மன் மீது வைக்கப்பட்டிருந்த எலும்புத் துண்டை வாயில் கவ்விக்கொண்டு கையில் சூலாயுதத்துடன் ஆவேசமாக நடமாடினார். அவர் ஆடியபடி அம்மன் உருவத்தைச் சிதைத்தார்.

அப்போது, அம்மனின் கழுத்துப்பகுதியில் இருந்து பிடிமண் எடுக்கப்பட்டது. மயான பூஜை பின்னிரவு 2.45 மணிக்கு முடிவடைந்தது.



பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்றனர். பலர் அருள் வந்து ஆடினர். காலை ஆழியாற்றங்கரையில் கோயில் தலைமை குருக்கள் கும்பஸ்தாபனம் செய்தார். அம்மன் உருவத்தின் கழுத்துப்பகுதியில் இருந்து மீண்டும் மண் எடுக்கப்பட்டு சக்தி கும்பஸ்தாபனம் கலசத்துடன் கோயில் மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...