கோவை: கோவை மாவட்ட ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் ஏழைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
கோவை: கோவை மாவட்ட ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் ஏழைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

கோவை மாவட்ட ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் 50-க்கும் மேற்பட்ட ஏழை மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா போத்தனூர் ரோட்டில் உள்ள பாத்திமா கனி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாவட்ட தலைவர் உமர்பாரூக் தலைமை தாங்கினார். ஹிதாயா பெண்கள் இஸ்லாமியக் கல்லூரி தாளாளர் இஸ்மாயில் இம்தாதி சமூக சேவை ஆற்றுவதன் அவசியத்தை விளக்கிக் கூறினார்.

மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலா, பாரதியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் சம்பத்குமார் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினர். மேலும், இந்நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில சமூக சேவைத்துறை செயலாளர் ஜலாலுதீன், இஸ்லாமிய மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி செயலாளர் ஷபீர் அஹ்மத், கோவை பேப்பர்ஸ் மார்ட் உரிமையாளர் சுதாகரன், சென்னை மொபைல்ஸ் உரிமையாளர் சம்சு அலி, எஸ்.ஏ.வெஜிடபிள்ஸ் உரிமையாளர் எஸ்.ஏ.பஷீர், இஸ்லாமியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி தாளாளர் சையத் இப்ராஹிம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

கோவை கரும்புக்கடை, கோட்டைமேடு, வெள்ளலூர், செல்வபுரம், மேட்டுப்பாளையம், போத்தனூர், தொப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் அனைத்து மதத்தைச் சேர்ந்த ஏழைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

முடிவில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாவட்ட மக்கள் தொடர்புச் செயலாளர் அப்துல் ஹக்கீம் நன்றி கூறினார்.
கோவை மாவட்ட ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் 50-க்கும் மேற்பட்ட ஏழை மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா போத்தனூர் ரோட்டில் உள்ள பாத்திமா கனி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாவட்ட தலைவர் உமர்பாரூக் தலைமை தாங்கினார். ஹிதாயா பெண்கள் இஸ்லாமியக் கல்லூரி தாளாளர் இஸ்மாயில் இம்தாதி சமூக சேவை ஆற்றுவதன் அவசியத்தை விளக்கிக் கூறினார்.
மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலா, பாரதியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் சம்பத்குமார் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினர். மேலும், இந்நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில சமூக சேவைத்துறை செயலாளர் ஜலாலுதீன், இஸ்லாமிய மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி செயலாளர் ஷபீர் அஹ்மத், கோவை பேப்பர்ஸ் மார்ட் உரிமையாளர் சுதாகரன், சென்னை மொபைல்ஸ் உரிமையாளர் சம்சு அலி, எஸ்.ஏ.வெஜிடபிள்ஸ் உரிமையாளர் எஸ்.ஏ.பஷீர், இஸ்லாமியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி தாளாளர் சையத் இப்ராஹிம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கோவை கரும்புக்கடை, கோட்டைமேடு, வெள்ளலூர், செல்வபுரம், மேட்டுப்பாளையம், போத்தனூர், தொப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் அனைத்து மதத்தைச் சேர்ந்த ஏழைகள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
முடிவில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாவட்ட மக்கள் தொடர்புச் செயலாளர் அப்துல் ஹக்கீம் நன்றி கூறினார்.