கோவை: விதிமுறைகளுக்கு புறம்பாக, காலியாக இருந்த ஆய்வக உதவியாளர் பணியிடத்தில், ஜூனியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதைக் கண்டித்து பேரூர் கல்வி மாவட்ட அலுவலக ஊழியர்கள் திடீரென அலுவலகத்தை பூட்டிக்கொண்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: விதிமுறைகளுக்கு புறம்பாக, காலியாக இருந்த ஆய்வக உதவியாளர் பணியிடத்தில், ஜூனியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதைக் கண்டித்து பேரூர் கல்வி மாவட்ட அலுவலக ஊழியர்கள் திடீரென அலுவலகத்தை பூட்டிக்கொண்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆய்வக உதவியாளர் பணிக்கு, பதவி உயர்வு வழங்காததைக் கண்டித்து, பேரூர் கல்வி மாவட்ட அலுவலகத்தில் நேற்று ஊழியர்கள் சிலர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பதிவறை எழுத்தாளராக உள்ள நான்கு பேருக்கு, உரிய தகுதிகள் இருந்தும் ஆய்வக உதவியாளராக பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அத்துடன் காலியிடத்தில் விதிமுறைகளை மீறி வேறு நபர்களுக்கு கடந்தாண்டு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து, தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில், பேரூர் கல்வி மாவட்ட அலுவலக ஊழியர்கள் நேற்று மாலை 6 மணிக்கு மேல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லாததால், கிட்டத்தட்ட 8.30 மணியளவில் அலுவலக வளாகத்தில் இரவு உணவு சமைத்துச் சாப்பிட்டனர். இதற்கிடையே குனியமுத்துார் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
போராட்டம் குறித்து தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க பேரூர் கல்வி மாவட்ட தலைவர் அறிவுமணி கூறுகையில், விதிமுறைகளுக்குப் புறம்பாக, காலியாக இருந்த ஆய்வக உதவியாளர் பணியிடத்தில் ஜூனியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்,'என்றார்.
பேரூர் கல்வி மாவட்ட அலுவலர் (பொறுப்பு) ரமேஷ் கூறுகையில்,'நான் பொறுப்பேற்றபிறகு, எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை. தற்போது ஆய்வக உதவியாளர் பணியிடம் காலியாக இல்லாததால் என் அதிகாரத்தை மீறி எதுவும் செய்ய முடியாது,'என்றார்.
ஆய்வக உதவியாளர் பணிக்கு, பதவி உயர்வு வழங்காததைக் கண்டித்து, பேரூர் கல்வி மாவட்ட அலுவலகத்தில் நேற்று ஊழியர்கள் சிலர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பதிவறை எழுத்தாளராக உள்ள நான்கு பேருக்கு, உரிய தகுதிகள் இருந்தும் ஆய்வக உதவியாளராக பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அத்துடன் காலியிடத்தில் விதிமுறைகளை மீறி வேறு நபர்களுக்கு கடந்தாண்டு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து, தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில், பேரூர் கல்வி மாவட்ட அலுவலக ஊழியர்கள் நேற்று மாலை 6 மணிக்கு மேல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லாததால், கிட்டத்தட்ட 8.30 மணியளவில் அலுவலக வளாகத்தில் இரவு உணவு சமைத்துச் சாப்பிட்டனர். இதற்கிடையே குனியமுத்துார் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
போராட்டம் குறித்து தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க பேரூர் கல்வி மாவட்ட தலைவர் அறிவுமணி கூறுகையில், விதிமுறைகளுக்குப் புறம்பாக, காலியாக இருந்த ஆய்வக உதவியாளர் பணியிடத்தில் ஜூனியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்,'என்றார்.
பேரூர் கல்வி மாவட்ட அலுவலர் (பொறுப்பு) ரமேஷ் கூறுகையில்,'நான் பொறுப்பேற்றபிறகு, எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை. தற்போது ஆய்வக உதவியாளர் பணியிடம் காலியாக இல்லாததால் என் அதிகாரத்தை மீறி எதுவும் செய்ய முடியாது,'என்றார்.