கோவையில், போதையில் அரசு பஸ்மீது கல்வீசிய 2 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

கோவை: கோவை சாய்பாபா காலனியில் போதையில் அரசு பஸ்மீது கல்வீசி சேதம் விளைவித்த 2 பேரின் ஜாமீன் மனுவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


கோவை: கோவை சாய்பாபா காலனியில் போதையில் அரசு பஸ்மீது கல்வீசி சேதம் விளைவித்த 2 பேரின் ஜாமீன் மனுவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கோவை காந்திபுரத்தில் இருந்து மருதமலைக்கு அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர்.ரோட்டில் சென்றபோது குடிபோதையில் மோட்டார்சைக்கிளில் வந்த இருவர் பஸ்சை முந்திச் செல்ல முயன்றனர். அப்போது ஏற்பட்ட தகராறில் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை கல்வீசி உடைத்தனர்.

இதுகுறித்து பஸ் நடத்துனர் ரவிக்குமார் அளித்த புகாரின் பேரில், கே.கே.புதுார் நான்காவது வீதியைச் சேர்ந்த கார்த்திக், சதாம் உசேன் ஆகியோர் மீது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துதல் சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிந்து கடந்த 10-ம் தேதி கைது செய்தனர். அவர்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரித்த நீதிபதி, அவர்களது ஜாமீன்மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...