கோவை: கோவை செல்வபுரத்தில் பூட்டிக்கிடந்த வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் திருடப்பட்டது.
கோவை: கோவை செல்வபுரத்தில் பூட்டிக்கிடந்த வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் திருடப்பட்டது.
கோவை செல்வபுரம் ராமமூர்த்தி ஈரோடு வடக்கு ஹவுசிங் யூனிட் பகுதியில் வசிப்பவர் காஜாமைதீன். வியாபாரியான இவர் கடந்த 16-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் திருநெல்வேலிக்கு சென்றார்.
இந்நிலையில் இன்று காலை அவரது வீடு உடைக்கப்பட்டு, பீரோ அலங்கோலமாகக் கிடந்தது. தகவலறிந்த காஜா மைதீனின் தம்பி தமீம் அன்சாரி செல்வபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தமீம் அன்சாரி செல்வபுரம் பகுதியில் உள்ள ஜாக் பள்ளிவாசலின் தலைவராக உள்ளார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் 5 பவுன் நகை, 20 ஆயிரம் ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இன்று அதிகாலை நடந்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை செல்வபுரம் ராமமூர்த்தி ஈரோடு வடக்கு ஹவுசிங் யூனிட் பகுதியில் வசிப்பவர் காஜாமைதீன். வியாபாரியான இவர் கடந்த 16-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் திருநெல்வேலிக்கு சென்றார்.
இந்நிலையில் இன்று காலை அவரது வீடு உடைக்கப்பட்டு, பீரோ அலங்கோலமாகக் கிடந்தது. தகவலறிந்த காஜா மைதீனின் தம்பி தமீம் அன்சாரி செல்வபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தமீம் அன்சாரி செல்வபுரம் பகுதியில் உள்ள ஜாக் பள்ளிவாசலின் தலைவராக உள்ளார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் 5 பவுன் நகை, 20 ஆயிரம் ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இன்று அதிகாலை நடந்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.