சிறுவாணி அணையில் நீர்மட்டம் 33 அடியாக உள்ளது; கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை : அதிகாரிகள் தகவல்

சிறுவாணி அணையில் நீர்மட்டம் 33 அடியாக உள்ளது; கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை : அதிகாரிகள் தகவல்


கோவை: கோவை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையில் 33 அடிக்கு தண்ணீர் உள்ளதால் கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை, என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 26 வார்டுகள் மட்டுமின்றி வழியோரங்களில் உள்ள கிராமங்களுக்கும் சிறுவாணி அணை நீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கோவையில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்ததால், குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி காணப்பட்டன. குறிப்பாக, கோவையின் முக்கிய ஆதாரமான குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையும் நிரம்பியது.

கடந்த சில வாரங்களாக கோவையில் மழையின்றி காணப்படுகிறது. இதனிடையே, இந்த அணையில் இருந்து நாள்தோறும் 82 முதல் 90 எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், அணையின் நீர்மட்டும் குறைந்து வருகிறது. தற்போது அணையில் 33 அடிக்கு தண்ணீர் உள்ளது. 

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது, கடந்தாண்டு மட்டுமின்றி, கடந்த ஜனவரி மாதமும் சிறுவாணி அணை பிடிப்பு பகுதியில் நல்ல மழை பெய்தது. இதனால், அணை நீர்மட்டம் முழு கொள்ளவை எட்டியது. அணையில் இருந்து குடிநீருக்காக தினமும் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால், அணை நீர்மட்டம் 33 அடியாக குறைந்து உள்ளது. இருப்பினும் தற்போது உள்ள தண்ணீரை பயன்படுத்தி கோடை காலத்தில் மாநகராட்சி பகுதிகளுக்கு போதுமான குடிநீர் வழங்க முடியும். தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. தற்போது அணையில் இருந்து தினமும் 82 எம்.எல்.டி. அளவுக்கு தண்ணீர் எடுக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...