கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று டாக்டர் மற்றும் ஜோதிடரிடம் மோட்டார் சைக்கிள் மற்றும் லேப்டாப் திருடப்பட்டது.
கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று டாக்டர் மற்றும் ஜோதிடரிடம் மோட்டார் சைக்கிள் மற்றும் லேப்டாப் திருடப்பட்டது.
கோவை அருகே உள்ள காரணம் பேட்டையைச் சேர்ந்தவர் வைரவன். ஜோதிடரான இவர் இறந்த ஒருவரின் உடலைப் பார்ப்பதற்காக நேற்று மாலை கோவை அரசு மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். மோட்டார் சைக்கிளை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்திவிட்டு பிரேத பரிசோதனை பிரிவுக்கு சென்று கொண்டிருந்தார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளைக் காணவில்லை.
இந்நிலையில் மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு டாக்டராக பணியாற்றும் பிரனேஷ் என்பவரது அறையில் இருந்த லேப்டாப்பையும் மர்ம ஆசாமிகள் திருடிச் சென்று விட்டனர்.
கோவை அரசு மருத்துவமனை ரேஸ்கோர்ஸ் சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு காவல்நிலைய கட்டுப்பாட்டில் வருகிறது. இந்த அரசு மருத்துவமனையில் போலீஸ் ரோந்துப் பணி சரிவர நடைபெறவில்லை என்றும், அங்கு கண்காணிப்பு கேமராக்கள் இருந்தபோதும் குற்றவாளிகளைப் பிடிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. போலீசார் அலட்சியம் காட்டுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் ஏழை எளிய மக்களே. அவர்களைப் பாதுகாக்க போலீஸ் அலட்சியம் காட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுவிஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுமருத்துவமனையில் திருட்டைத் தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டதன்பேரில் போலீசார் திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
கோவை அருகே உள்ள காரணம் பேட்டையைச் சேர்ந்தவர் வைரவன். ஜோதிடரான இவர் இறந்த ஒருவரின் உடலைப் பார்ப்பதற்காக நேற்று மாலை கோவை அரசு மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். மோட்டார் சைக்கிளை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்திவிட்டு பிரேத பரிசோதனை பிரிவுக்கு சென்று கொண்டிருந்தார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளைக் காணவில்லை.
இந்நிலையில் மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு டாக்டராக பணியாற்றும் பிரனேஷ் என்பவரது அறையில் இருந்த லேப்டாப்பையும் மர்ம ஆசாமிகள் திருடிச் சென்று விட்டனர்.
கோவை அரசு மருத்துவமனை ரேஸ்கோர்ஸ் சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு காவல்நிலைய கட்டுப்பாட்டில் வருகிறது. இந்த அரசு மருத்துவமனையில் போலீஸ் ரோந்துப் பணி சரிவர நடைபெறவில்லை என்றும், அங்கு கண்காணிப்பு கேமராக்கள் இருந்தபோதும் குற்றவாளிகளைப் பிடிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. போலீசார் அலட்சியம் காட்டுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் ஏழை எளிய மக்களே. அவர்களைப் பாதுகாக்க போலீஸ் அலட்சியம் காட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுவிஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுமருத்துவமனையில் திருட்டைத் தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டதன்பேரில் போலீசார் திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.