ஆர்.எஸ்.புரம் மல்டிலெவல் கார் பார்க்கிங் பணிகள் 80 சதவீதம் நிறைவு; அடுத்த மாதம் இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும், என தகவல்

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் நடந்து வரும் மல்டிலெவல் கார் பார்க்கிங் கட்டுமான பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இப்பணிகள் விரைவில் முடிந்து அடுத்த மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும், என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் நடந்து வரும் மல்டிலெவல் கார் பார்க்கிங் கட்டுமான பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இப்பணிகள் விரைவில் முடிந்து அடுத்த மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும், என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ரூ.42 கோடி மதிப்பில் மல்டிலெவல் கார்பார்க்கிங்

கோவை ஆர்.எஸ்.புரம், டி.பி. ரோட்டில் மல்டிலெவல் கார்பார்க்கிங் ரூ.42 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சியால் கட்டப்பட்டு வருகிறது. முன்னதாக, ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் 11 ஆயிரம் சதுர மீட்டரில் 1,990 இருசக்கர வாகனங்கள், 979 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் 4 தளங்களுடன் கூடிய மல்டிலெவல் பார்க்கிங் கட்ட ரூ.69.80 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டது. ஆனால், நிர்வாக காரணங்களால் திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.

4 அடுக்கு பார்க்கிங் வசதி

இதைத்தொடர்ந்து, மல்டிலெவல் பார்க்கிங் கட்டிடத்தை மாநகராட்சி நிர்வாகத்தினரே கட்டி பராமரிப்புக்காக தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த மல்டிலெவல் கார் பார்க்கிங்கில் முதல் கட்டமாக 370 கார்கள் நிறுத்தும் அளவிற்கு கட்டிட பணிகள் மேற்கொள்ளப்படும். 4 அடுக்கு கொண்டதாக இது அமைக்கப்படும், என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, முதல்கட்டமாக ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் இந்த திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் துவங்கி கட்டி வருகிறது. தற்போது 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் நடந்து வரும் மல்டிலெவல் பார்க்கிங் கட்டுமான பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மார்ச் மாதம் இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும்,’’ என்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...