கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 2,300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - ஒருவர் கைது!

கோவை: கோவை சூலூர் பகுதியில் வேன் மூலமாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 2,300 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.


கோவை: கோவை சூலூர் பகுதியில் வேன் மூலமாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 2,300 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கோவை சூலூர் பகுதியில் நேற்று மாலை கேரளாவிற்கு வேன் மூலமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சூலூர் சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணனுக்கு தொலைபேசி மூலமாக தகவல் வந்தது.

இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அருள்பிரகாஷ் அடங்கிய போலீசார் கோவை பாலக்காடு ரோட்டில் ஆக்ரோ கம்பெனி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, பொலிரோ பிக்கப் மற்றும் அசோக் லைலாண்ட் வாகனங்கள் வந்தன. அதனை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 56 ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தன. ஒரு முட்டையிலும் 50 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. மொத்த எடை 2300 கிலோவாகும்.

இதனையடுத்து, வேனை ஓட்டி வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை போலீசார் பிடித்தனர். மற்றொரு டிரைவர் தங்கராஜ் என்பவர் தப்பி ஓடிவிட்டார். கார்த்திக்கிடம் விசாரணை செய்தபோது கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்திக் கொண்டு சென்றதாக கூறினார்.

இதனைத்தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் ரேஷன் அரிசி மூட்டைகளையும் குற்றவாளியையும் ஒப்படைத்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...