கோவையில் குழந்தையிடம் முத்தம் பெற்று, முதியவருடன் செல்பி எடுத்து, பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி குறைகளை கேட்டறிந்து வருகிறார்.
கோவை: கோவையில் குழந்தையிடம் முத்தம் பெற்று, முதியவருடன் செல்பி எடுத்து, பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி குறைகளை கேட்டறிந்து வருகிறார்.
கோவை பீளமேடு கொடிசியா அருகில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரங்கிற்கு வந்த ஸ்டாலின் சுற்றியிருந்த கட்சியினரை சந்தித்து கைகுலுக்கி அவர்கள் ஆரவாரத்தில் அவருடைய வரவேற்பைப் பெற்றுக் கொண்டார். பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்த பகுதிக்குள் மேடையிலிருந்து அரங்கத்துக்குள் வந்த ஸ்டாலின் நேரடியாக மக்களை சந்தித்தார்.
அப்போது, மகளிர் மற்றும் முதியவர்கள், குழந்தைகள் என அநேகர் காத்துக்கொண்டிருந்தனர். ஸ்டாலினை பார்த்ததும் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர். உடனடியாக அனைத்து மக்களிடமும் சென்று அனைவரிடமும் கைகுலுக்கி அவர்கள் கொடுத்த மனுக்களைப் பெற்றுக்கொண்டார். அப்போது ஒரு முதியவர் செல்பி எடுக்க ஆசைப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருடைய செல்போனை பெற்று ஸ்டாலின் செல்பி எடுத்து அவருடைய ஆசையை நிறைவேற்றினார்.

அதைத்தொடர்ந்து, மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் புகைப்படம் எடுக்க ஆசைப்பட அவர்களோடு இணைந்து செல்பி எடுத்துக்கொண்டார். ஒரு தாயிடமிருந்து குழந்தையைப் பெற்று முத்தமிட்டு மகிழ்ந்தார். தொடர்ந்து மக்களுடைய மனுக்களைப் பெற்று வருகிறார். ஆர்வத்தின் மிகுதியால் ஒருசில மூதாட்டிகள் கன்னத்தை பிடித்தும் கட்டித் தழுவியும் அவர் தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து மக்களை சந்தித்து மனுக்களை பெற்று வருகிறார்.