கோவை: கோவை - மேட்டுப்பாளையம் பயணிகள் ரயிலை இயக்க வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: கோவை - மேட்டுப்பாளையம் பயணிகள் ரயிலை இயக்க வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை - மேட்டுப்பாளையம் இடையே பயணிகள் ரயில் ரயிலை இயக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு கு.இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். கோவை - மேட்டுப்பாளையம் இடையே இயங்கி வந்த பயணிகள் ரயில் கொரானா காலத்தில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று மீண்டும் அனைத்து ரயில் போக்குவரத்துகளும் இயங்க துவங்கியுள்ள நிலையில், பயணிகள் ரயில்களை மட்டும் இயக்காமல் வைத்துள்ளது மோடி அரசு.
பெரும்பாலும் ஏழை, எளிய மக்களுக்கு பயன்பட்டு வந்த இந்த பயணிகள் ரயில் சேவை இன்று நிறுத்தப்பட்டுள்ளது அப்பகுதி மக்களுக்கு தான் பெரும் சுமையாக அமைந்துள்ளது.

எனவே, மத்திய மோடி அரசு மக்கள் விரோத போக்கை கைவிட்டு, கோவை -மேட்டுப்பாளையம் பயணிகள் ரயிலை உடனடியாக இயக்க வலியுறுத்தி கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் காரமடை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைதாகினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் புலிகள் கட்சியின் தோழர்களும் கலந்து கொண்டனர்.
கோவை - மேட்டுப்பாளையம் இடையே பயணிகள் ரயில் ரயிலை இயக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு கு.இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். கோவை - மேட்டுப்பாளையம் இடையே இயங்கி வந்த பயணிகள் ரயில் கொரானா காலத்தில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று மீண்டும் அனைத்து ரயில் போக்குவரத்துகளும் இயங்க துவங்கியுள்ள நிலையில், பயணிகள் ரயில்களை மட்டும் இயக்காமல் வைத்துள்ளது மோடி அரசு.
பெரும்பாலும் ஏழை, எளிய மக்களுக்கு பயன்பட்டு வந்த இந்த பயணிகள் ரயில் சேவை இன்று நிறுத்தப்பட்டுள்ளது அப்பகுதி மக்களுக்கு தான் பெரும் சுமையாக அமைந்துள்ளது.
எனவே, மத்திய மோடி அரசு மக்கள் விரோத போக்கை கைவிட்டு, கோவை -மேட்டுப்பாளையம் பயணிகள் ரயிலை உடனடியாக இயக்க வலியுறுத்தி கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில் காரமடை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைதாகினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் புலிகள் கட்சியின் தோழர்களும் கலந்து கொண்டனர்.