கோவை: கோவையில், போலீஸ் என அறிமுகம் செய்து மூதாட்டியிடம் நகை பறித்துச் சென்றது தொடர்பாக 2 வாலிபரை போலீஸ் வலைவீசி தேடிவருகிறது.
கோவை: கோவையில், போலீஸ் என அறிமுகம் செய்து மூதாட்டியிடம் நகை பறித்துச் சென்றது தொடர்பாக 2 வாலிபரை போலீஸ் வலைவீசி தேடிவருகிறது.
கோவை இடையர்பாளையம் அருகே உள்ள ஜே.ஜே. நகரைச் சேர்ந்தவர் ஆனந்தகிருஷ்ணன். இவரது மனைவி சரஸ்வதி (வயது 60), நேற்று மாலை இவர் காஞ்சிபுரம் ராஜாஜி ரோட்டில் நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் சரஸ்வதியின் அருகில் வந்து தங்களை போலீஸ் என்று அறிமுகம் செய்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் சரஸ்வதியிடம் இந்தப் பகுதியில் வழிப்பறி கொள்ளையர்கள் அட்டகாசம் அதிகமாக உள்ளது. எனவே வயதான காலத்தில் நகைகளைப் போட்டு செல்ல வேண்டாம் என அறிவுரை கூறினர். இதை உண்மையென நம்பிய சரஸ்வதி தன் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலிச் செயின் மற்றும் 2 பவுன் என மொத்தம் 5 பவுன் நகைகளை கழற்றி போலீஸ் என கூறிய நபரிடம் கொடுத்தார். அவர்கள் அதனை பெற்று ஒரு பேப்பரில் மடித்து சரஸ்வதியிடம் கொடுத்து கைப்பையில் வைத்துக் கொள்ளுமாறு கொடுத்தனர்.
சிறிது நேரம் கழித்து மூதாட்டி பேப்பரை திறந்து பார்த்தபோது அதில் சிறிய கற்கள் மட்டுமே இருந்தன. போலீஸ் என கூறிய வாலிபர்கள் 5 பவுன் நகைகளை ஏமாற்றி பறித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சரஸ்வதி காட்டூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ் என கூறி மூதாட்டியிடம் 5 பவுன் நகைகளை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.
கோவை இடையர்பாளையம் அருகே உள்ள ஜே.ஜே. நகரைச் சேர்ந்தவர் ஆனந்தகிருஷ்ணன். இவரது மனைவி சரஸ்வதி (வயது 60), நேற்று மாலை இவர் காஞ்சிபுரம் ராஜாஜி ரோட்டில் நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் சரஸ்வதியின் அருகில் வந்து தங்களை போலீஸ் என்று அறிமுகம் செய்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் சரஸ்வதியிடம் இந்தப் பகுதியில் வழிப்பறி கொள்ளையர்கள் அட்டகாசம் அதிகமாக உள்ளது. எனவே வயதான காலத்தில் நகைகளைப் போட்டு செல்ல வேண்டாம் என அறிவுரை கூறினர். இதை உண்மையென நம்பிய சரஸ்வதி தன் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலிச் செயின் மற்றும் 2 பவுன் என மொத்தம் 5 பவுன் நகைகளை கழற்றி போலீஸ் என கூறிய நபரிடம் கொடுத்தார். அவர்கள் அதனை பெற்று ஒரு பேப்பரில் மடித்து சரஸ்வதியிடம் கொடுத்து கைப்பையில் வைத்துக் கொள்ளுமாறு கொடுத்தனர்.
சிறிது நேரம் கழித்து மூதாட்டி பேப்பரை திறந்து பார்த்தபோது அதில் சிறிய கற்கள் மட்டுமே இருந்தன. போலீஸ் என கூறிய வாலிபர்கள் 5 பவுன் நகைகளை ஏமாற்றி பறித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சரஸ்வதி காட்டூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ் என கூறி மூதாட்டியிடம் 5 பவுன் நகைகளை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.