50 ஆண்டுகளில் செய்யாத சாதனையை ஐந்து ஆண்டுகளில் அ.தி.மு.க. செய்துள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம்!

கோவை: 50 ஆண்டுகளில் செய்யாத சாதனையை ஐந்து ஆண்டுகளில் அ.தி.மு.க. செய்துள்ளது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதத்துடன் கூறினார்.


கோவை: 50 ஆண்டுகளில் செய்யாத சாதனையை ஐந்து ஆண்டுகளில் அ.தி.மு.க. செய்துள்ளது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதத்துடன் கூறினார்.



கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவில்பாளையம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் 1000 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவில்பாளையம் பகுதியில், 1500 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா, தாலிக்கு தங்கம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து முடிவுற்ற திட்டப் பணிகளை மக்களின் பயன்பாட்டுக்காக அமைச்சர் திறந்து வைத்தார். முன்னதாக வளைகாப்பு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, `மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் இருந்தபோது தமிழக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. தற்போது தலையில் விக்கு வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறார். விவசாய குடும்பத்தில் பிறந்த முதலமைச்சர் தமிழகத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி 5 ஆண்டுகளில் கிடைத்துள்ளது' என்றார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...