பெட்ரோல், டீசல், காஸ் விலையேற்றத்தால் தேர்தலில் பாஜகவிற்கு எந்தவிதபாதிப்பும் இருக்காது - கோவையில் பா.ஜ.க மாநில தலைவர் எல். முருகன் பேட்டி

கோவை: பெட்ரோல் டீசல், காஸ் விலையேற்றம் தற்காலிகமானது தான் எனவும் இதனால் வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்தவித பாதிப்பும் இருக்காது, என்று பா.ஜ. மாநில தலைவர் எல். முருகன் கோவையில் தெரிவித்துள்ளார்.


கோவை: பெட்ரோல் டீசல், காஸ் விலையேற்றம் தற்காலிகமானது தான் எனவும் இதனால் வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்தவித பாதிப்பும் இருக்காது, என்று பா.ஜ. மாநில தலைவர் எல். முருகன் கோவையில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வரும் 25ம் தேதி கோவையில் பல்வேறு புதிய திட்டங்களை துவக்கி வைக்க வருகிறார். இதற்கான, நிகழ்ச்சி ஏற்பாடுகள் கோவை அவிநாசி சாலையிலுள்ள கொடிசியா மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.



பொதுக்கூட்ட மேடை அமைப்பதற்கான கால்கோள் விழா இன்று காலை, பா.ஜ. தமிழக தேர்தல் பொறுப்பாளர்கள் மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன்ரெட்டி மற்றும் மத்திய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை இணையமைச்சர் வி.கே.சிங் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.



இதில் பா.ஜ. மாநில தலைவர் எல். முருகன், மகளிரணி தேசிய செயலாளர் வானதி சீனிவாசன், மாநில பொருளாளர் சேகர், மாநில துணை தலைவர் அண்ணாமலை, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, பா.ஜ. மாநில தலைவர் எல்.முருகன் கூறியதாவது: வரும் 21ம் தேதி ராஜ்நாத் சிங் சேலத்தில் பிரசாரத்தை துவங்க உள்ளார். தொடர்ந்து, தேசிய தலைவர்கள் தமிழகம் வர உள்ளனர். தேர்தல் சம்மந்தமான ஆலோசனை கூட்டம் 2 நாட்கள் சென்னையில், கோவையிலும் நடைபெற உள்ளது.

சமீபத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலையேற்றம் குறித்து பதிலளித்த அவர், இந்த விலையேற்றம் தற்காலிகமானது என்றும் எண்ணெய் நிறுவனங்களின் விலையேற்றமே இதற்கு காரணம், என்றார். மேலும், இதனால் பாஜகவிற்கு தேர்தலில் எந்தவித பாதிப்பும் இருக்காது. இது நாளடைவில் குறைய வாய்ப்பு உண்டு. எரிவாயு விலை நிச்சயமாக குறையும். காஸ் மானியம் நிறுத்தப்படவில்லை. அவரவர் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது, என்று விளக்கினார்.

தமிழக சட்டமன்றத்துக்கு அதிக எண்ணிக்கையில் பா.ஜ. உறுப்பினர்கள் வெற்றி பெறுவார்கள், என்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்தார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...