கோவை: கோவையில் ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி வாலிபரிடம் மோசடி செய்த முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
கோவை: கோவையில் ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி வாலிபரிடம் மோசடி செய்த முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
கோவை பேரூர் அருகே உள்ள மத்திபாளையத்தைச் சேர்ந்தவர் பாரத் பிரியதர்ஷன் (வயது 22). இவர் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் ராணுவ வீரரான கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ரஞ்சித்என்பவரது அறிமுகம் கிடைத்தது. அவரிடம் பிரியதர்ஷன் தன்னை எப்படியாவது ராணுவத்தில் சேர்த்து விடுங்கள் என்று கூறினார். அப்போது ரஞ்சித் தனக்கு ராணுவத்தில் ஏராளமான அதிகாரிகளைத் தெரியும் என்று கூறியதுடன் பணியில் சேர கொஞ்சம் பணம் செலவாகும் என ஆசைவார்த்தை கூறினார்.
இதை உண்மையென நம்பிய பாரத் பிரியதர்ஷன் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தார். ஆனால் பணத்தைப் பெற்றுக்கொண்ட ரஞ்சித் நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். தன்னை ரஞ்சித் ஏமாற்றியதை அறிந்த பாரத் பிரியதர்ஷன் இதுகுறித்து ஆலந்துரை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த ரஞ்சித் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை பேரூர் அருகே உள்ள மத்திபாளையத்தைச் சேர்ந்தவர் பாரத் பிரியதர்ஷன் (வயது 22). இவர் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் ராணுவ வீரரான கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ரஞ்சித்என்பவரது அறிமுகம் கிடைத்தது. அவரிடம் பிரியதர்ஷன் தன்னை எப்படியாவது ராணுவத்தில் சேர்த்து விடுங்கள் என்று கூறினார். அப்போது ரஞ்சித் தனக்கு ராணுவத்தில் ஏராளமான அதிகாரிகளைத் தெரியும் என்று கூறியதுடன் பணியில் சேர கொஞ்சம் பணம் செலவாகும் என ஆசைவார்த்தை கூறினார்.
இதை உண்மையென நம்பிய பாரத் பிரியதர்ஷன் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தார். ஆனால் பணத்தைப் பெற்றுக்கொண்ட ரஞ்சித் நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். தன்னை ரஞ்சித் ஏமாற்றியதை அறிந்த பாரத் பிரியதர்ஷன் இதுகுறித்து ஆலந்துரை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த ரஞ்சித் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.