பாதாள சாக்கடைத் திட்டம் விரைந்து முடிக்க வலியுறுத்தி பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் முற்றுகை: 200-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கைது!

பொள்ளாச்சி: பாதாள சாக்கடைத் திட்டம் விரைந்து முடிக்க வலியுறுத்தி பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தி.மு.க.வினர் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



பொள்ளாச்சி: பாதாள சாக்கடைத் திட்டம் விரைந்து முடிக்க வலியுறுத்தி பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தி.மு.க.வினர் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் பாதாள சாக்கடைத் திட்டம் கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 170 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வரும் இந்தப் பணி நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் நிறைவடையாமல் உள்ளது. நகர்ப் பகுதியில் உள்ள சாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக உள்ளதால் தினந்தோறும் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.



இந்நிலையில் பாதாள சாக்கடைத் திட்டம் ஆமை வேகத்தில் நடைபெறுவதைக் கண்டித்தும், குப்பை வரி உள்ளிட்ட தேவையற்ற வரிகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் பொள்ளாச்சி நகர தி.மு.க. பொறுப்பாளர் வரதராஜன் தலைமையில் இன்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகை செய்யும் போராட்டம் நடைபெற்றது.



முற்றுகையில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட200-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...